என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
மதுரையில் பிறந்து துபாயில் வளர்ந்த பெண் நிவேதா பெத்துராஜ். மாடலிங் துறையில் இருந்த இவர் 'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் சினிமாவிற்கு வந்தார். தொடர்ந்து ‛என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். சில தெலுங்கு படங்களிலும் நடித்தார். துபாயில் வசிக்கும் இவர் சமீபத்தில் ரஜித் இப்ரான் என்பவரை திருமணம் செய்ய போவதாக அறிவித்தார்.
இந்நிலையில் எக்ஸ் தளத்தில் அவ்வப்போது சமூகம் சார்ந்த கருத்துக்களை பதிவிடும் இவர் இப்போது, ‛‛செய்தி பார்க்க எந்த தளத்திற்குப் போனாலும் கொலை, போர், கொடுமை காட்சிகள் எளிதாக பரிமாறப்படுகிறது. நாம் தேடாவிட்டாலும் தினமும் அதை நுகர்கிறோம். இந்த அளவு வன்முறை, நம்முள் உள்ள மனிதத்தன்மையை அழித்துவிடும். தகவலை அறிய வேண்டுமென்றால் வேறு வழி தேவை'' என குறிப்பிட்டுள்ளார்.