சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

மதுரையில் பிறந்து துபாயில் வளர்ந்த பெண் நிவேதா பெத்துராஜ். மாடலிங் துறையில் இருந்த இவர் 'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் சினிமாவிற்கு வந்தார். தொடர்ந்து ‛என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். சில தெலுங்கு படங்களிலும் நடித்தார். துபாயில் வசிக்கும் இவர் சமீபத்தில் ரஜித் இப்ரான் என்பவரை திருமணம் செய்ய போவதாக அறிவித்தார்.
இந்நிலையில் எக்ஸ் தளத்தில் அவ்வப்போது சமூகம் சார்ந்த கருத்துக்களை பதிவிடும் இவர் இப்போது, ‛‛செய்தி பார்க்க எந்த தளத்திற்குப் போனாலும் கொலை, போர், கொடுமை காட்சிகள் எளிதாக பரிமாறப்படுகிறது. நாம் தேடாவிட்டாலும் தினமும் அதை நுகர்கிறோம். இந்த அளவு வன்முறை, நம்முள் உள்ள மனிதத்தன்மையை அழித்துவிடும். தகவலை அறிய வேண்டுமென்றால் வேறு வழி தேவை'' என குறிப்பிட்டுள்ளார்.




