Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இசையரசி ‛பி.சுசீலா - பிறந்தநாள் ஸ்பெஷல்

13 நவ, 2021 - 11:31 IST
எழுத்தின் அளவு:
Happy-birthday-Legend-singer-P.Susheela

வட இந்தியாவில் லதா மங்கேஷ்கர் போன்று தென்னிந்தியாவின் பாடும் வானம்பாடி பி.சுசீலா. 87 வயதான பி.சுசீலா, 67 ஆண்டுகளாக சினிமாவில் பாடி வருகிறார். இசையரசி சுசீலாவின் 87வது பிறந்த தினம் இன்று. அவரைப்பற்றிய சிறப்பு தொகுப்பு இதோ...

இசை பயணம்

ஆந்திர மாநிலம், விஜயநகரத்தில், முகுந்தராவ் - சேஷாவதாரம் தம்பதிக்கு, 1935 நவ.,13ல் பிறந்தவர் பின்னணி பாடகி பி.சுசீலா. சிறு வயதிலேயே இவரிடம் இசை ஆர்வம் இருந்ததை கண்டு கொண்ட அவரது பெற்றோர், முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றார். பின்னர் விஜயநகரம் இசைக்கல்லூரியில் டிப்ளமோ படிப்பை படித்து அதில் முதல் வகுப்பில் தேறினார். இதற்கு முன்பே வானொலி நிகழ்ச்சிகளிலும் பாடல்கள் பாடிக் கொண்டிருந்த சுசீலாவிற்கு, அதே வானொலி நிலையத்தின் மூலம் சினிமாவில் பாடவும் வாய்ப்பு வந்தது எதிர்பாராத ஒன்று.




அந்நாளில் மிகப்பெரிய இசை அமைப்பாளரான பெண்டியாலா நாகேஸ்வரராவ், தான் இசை அமைக்கும் புதிய படத்திற்கு புதிய குரல்களை தேடிக்கொண்டிருந்தார். வானொலி நிலையத்தில் பாடிக் கொண்டிருப்பவர்களில் சிலரை அனுப்பி வைக்குமாறு நிலையத்தாரிடம் நாகேஸ்வரராவ் கூற அவர்கள் ஐந்து பேரை அனுப்பி வைக்க அதில் ஒருவர் தான் பி.சுசீலா.

1953-ஆம் ஆண்டு ஏ நாகேஸ்வரராவ், ஜி வரலஷ்மி நடிப்பில் பெண்டியாலா நாகேஸ்வரராவ் இசையமைப்பில் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவான திரைப்படம் பெற்ற தாய். இத்திரைப்படம் தான் சுசீலாவின் திரை இசைப் பயணத்தின் ஆணிவேர். ஏதுக்கழைத் தாய் ஏதுக்கு என்ற பாடல் தான் இவரது முதல் திரைப்பட பாடலாகும். உடன் பாடியவர் ஏ.எம்.ராஜா. இதன் பின் ஏ.வி.எம் ஸ்டூடியோவில் மாதச்சம்பளத்தில் பின்னணிப் பாடகியாக இருந்து வந்தார்.




திருப்பம் தந்த படம்
சுசீலாவின் திரைப்பயணத்தில் ஒரு மிகப்பெரிய திருப்பத்தை 1955-ஆம் ஆண்டு வெளிவந்த கணவனே கண்கண்ட தெய்வம் என்ற திரைப்படம் மாற்றியது என்றால் அது மிகையல்ல. காரணம் அத்திரைப்படத்தில் அவர் பாடிய அத்தனைப் பாடல்களும் தேனில் விழுந்த பலாவாக இனிமையாக இருந்தது. எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ, உன்னைக் கண் தேடுதே உன் எழில் காணவே உள்ளம் நாடுதே, அன்பில் மலர்ந்த நல் ரோஜா கண்வளராய் என் ராஜா போன்ற பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை.

முத்திரை பதித்த உத்தம புத்திரன்
சுசீலாவின் திரை இசை மகுடத்தில் மீண்டும் ஒரு வைரக்கல் பதித்த திரைப்படம் உத்தம புத்திரன். 1957 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்திற்கு இசைப் கோர்ப்பு ஜி ராமனாதன். பி லீலா ஜிக்கி, ஏ.பி.கோமளா, ஜமுனா ராணி என்று பலர் இப்படத்தில் பாடியிருந்தாலும், சுசீலாவிற்கு கிடைத்த பாடல்கள் தனி முத்திரை பதித்தன என்றே சொல்ல வேண்டும். முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே, அன்பே அமுதே அருங்கனியே, உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே போன்ற பாடல்களினால் அவர் நிலை உயரப் பெற்றார் என்றே சொல்ல வேண்டும்.

இதனைத் தொடர்ந்து 1959 ஆம் ஆண்டில் இயக்குநர் ஸ்ரீதரின் இயக்கத்தில் பின்னணி பாடகர் ஏ.எம்.ராஜாவின் இசையில் வந்து மிகப் பெரிய வெற்றி அடைந்த திரைப்படம் கல்யாணப் பரிசு. இதில் மொத்தம் 8 பாடல்கள் அதில் 5 பாடல்கள் சுசீலா பாடியவை, அத்தனையும் முத்தானவை.




எம்.எஸ்.வி., சுசீலா ராஜ்ஜியம்
1960களின் ஆரம்பம் விஸ்வநாதன் ராமமூர்த்தி என்ற இரட்டையர்களின் இசை, விஸ்வரூப ஆரம்பம் என்றே சொல்ல வேண்டும். இவர்களது இசையில் இயக்குநர் பீம்சிங்கின் இயக்கத்தில் வந்த ப வரிசைப் படங்கள் திரையிசையில் ஒரு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகை அல்ல. பாவ மன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், பார் மகளே பார் என்று ப வரிசைப் படங்களில் சுசீலாவின் குரலில் வந்த அத்தனைப் பாடல்களும் சாகாவரம் பெற்றவை.

மலர்ந்தும் மலராத பாதி மலர், யார் யார் யார் அவள் யாரோ, மயங்குகிறாள் ஒரு மாது, அத்தான் என்னத்தான, பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது, ஆலய மணியின் ஓசையை, காதல் சிறகை காற்றினில் விரித்து, பார்த்தால் பசி தீரும், யாருக்கு மாப்பிள்ளை யாரோ, கொடி அசைந்ததும் காற்று வந்ததா என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

தேசிய விருது

1968 ஆம் ஆண்டு ஏ.வி.எம் தயாரிப்பில் உருவான உயர்ந்த மனிதன் திரைப்படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் சுசீலா பாடிய நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா என்ற பாடலுக்காக அந்த ஆண்டு சிறந்த பாடகிக்கான தேசிய விருதினைப் பெற்றார். 1970களின் பிற்பகுதியில் குறிப்பாக இசையமைப்பாளர் இளையராஜாவின் வருகைக்குப்பின் அடுத்த தலைமுறை கலைஞர்கள் திரைத்துறையில் கால்பதித்த காலம் இந்த காலகட்டங்களில் சுசீலாவின் பாடல்களின் எண்ணிக்கை முன்பிருந்த அளவு இல்லை என்றாலும் இளையராஜாவின இசையிலும் ஏராளமான வெற்றிப் பாடல்களை பாடியிருக்கின்றார்.




இளையராஜா டூ ரஹ்மான்
இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளியில், சொந்தமில்லை பந்தமில்லை பாடுது ஒரு பறவை என்ற பாடலை பாட ஆரம்பித்தவர் அவரது இசையில் எண்ணற்ற பாடல்களை பாடியிருக்கிறார். கண்ணன் ஒரு கைக்குழந்தை, டார்லிங் டார்லிங் டார்லிங், சுகமோ ஆயிரம், ராசாவே உன்ன காணாத நெஞ்சு, காலைத் தென்றல் பாடி வரும், நிலவு நேரம் இரவு காயும், கற்பூர பொம்மை ஒன்று, ராசாத்தி மனசில, முத்துமணி மாலை உன்ன தொட்டு தொட்டு தாலாட்ட என்று இவர் இளையராஜாவின் இசையில் பாடிய பாடல்கள் அனைத்தும் இன்றும் ரசிக நெஞ்சங்களில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன.

கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு, கப்பலேறிப் போயாச்சு என்று ஏ.ஆர்.ரஹ்மானின் இசையிலும் பாடி தன் குரலுக்கு என்றுமே வயதில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்.

மேலும் பி.சுசீலா பற்றிய பல்வேறு சுவாரஸ்ய தகவல்களுக்கு அருகில் உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்..... - https://cinema.dinamalar.com/p-susheela/index.php

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
த்ரிஷா உதிர்த்த வாழ்க்கைத் தத்துவம்த்ரிஷா உதிர்த்த வாழ்க்கைத் தத்துவம் மீண்டும் தங்கை கதாபாத்திரம் : தயக்கமில்லாத கீர்த்தி சுரேஷ் மீண்டும் தங்கை கதாபாத்திரம் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Ravindran - Chennai,இந்தியா
15 நவ, 2021 - 17:30 Report Abuse
Ravindran Susheela has no equal to her voice which actually should be considered as a very cute musical instrument par excellence by itself . All her songs effortlessly come with mesmerizing rition and transporting sweetness. Latha Mangeshkar et el are next only to Susheela. May she live very long with fine health She is the living nightingale of India.
Rate this:
s t rajan - chennai,இந்தியா
15 நவ, 2021 - 00:18 Report Abuse
s t rajan சுசிலா அம்மா அவர்களின் variety and versatility இந்தியாவில் எவருக்கும் இல்லை. தெலுங்கை தாய்மொழியாக கொண்ட அவரின் தமிழ் பாடும் விதம், உச்சரிப்பு, நளினம், நவரசம் வேறு எவருக்கும் இல்லை. அவருக்கு பத்ம விருதுகள் உரிய காலத்தில் கொடூக்கப் படவில்லை. மேலும், 90கள் அவர் பாடிய காலத்தில் இத்தனை award கள் இருந்திருந்தால், வருடா வருடம் அவர்தான் வென்றிருப்பார். மலர்ந்தும் மலராத, அத்தான் என்னத்தான், என் வாழ்வில் புதுப்பாதை, தங்கத்திலே ஒரு குறை, பார்த்த ஞாபகம், சிட்டுக்குருவி, பதினாறு வயதினிலே, பதினேழு பிள்ளை யம்மா, மன்னவன் வந்தானடி, மறைந்திருந்து பார்க்கும், என்னதான் பாடுவதோ(நாணல்), என்ன நினைத்து என்னை, ஆலயமணியின், காதல் சிறகை காற்றினால் விரித்து, காகித ஓடம் கடல் அலைமேலே, கண்ணன் வருவான், அடுத்தாத்து அம்புஜம், நாளையிந்த வேளை அத்தானின் முத்தங்கள், கண்ணா கருமை நிற, ஆண்டவனே உன் (ஒளிவிளக்கு), மாலைப் பொழுதின் மயக்கத்திலே... அப்பப்பா இன்னும் எத்தனை ஆயிரம் வெற்றிப் பாடல்கள். லதா மங்கேஷ்கர் வடநாட்டில் பிறந்ததால் பாரத ரத்னா கொடுத்து விட்டார்கள். "வட இந்திய சுசீலா" லதா மங்கேஷ்கர் அவர்களின் பாடல்களும் எனக்கு பிடிக்கும். ஆயினும் சுசிலா அம்மா அவர்கள் போல் பன் மொழிப் பாடகர் இல்லை. அவர் அங்கொன்றும் இங்கொன்றும் பாடியிருக்கலாம். ஆனால் நம்மவரோ தெலுங்கு, மலையாள, கன்னட number one ஆக திகழ்ந்தவர். ஹிந்தி மற்ற மொழிகளிலும் பாடியிருக்கிறார் வாழ்க திருமதி சுசிலா அம்மா அவர்களின் புகழ்.
Rate this:
R Hariharan - Hyderabad,இந்தியா
14 நவ, 2021 - 10:01 Report Abuse
R Hariharan இரண்டு பெரும் காலத்தால் அழியாத பாடகர்கள் என்பதில் சந்தேகமில்லை.
Rate this:
Muthiah Srirajalingam - Westlake,ஆஸ்திரேலியா
13 நவ, 2021 - 15:05 Report Abuse
Muthiah Srirajalingam பி.சுசீலா அவர்களை பற்றி எழுதிய நீங்கள் எமது சிங்க குரலோன் T.M.சௌந்தரராஜன் அவர்களை பற்றியும் குறிப்பிட மறந்து ஏனோ?
Rate this:
13 நவ, 2021 - 13:14 Report Abuse
MAHALINGAMSSVA இசையரசி நீண்ட காலம் நலமுடன் வாழ இறைவன் அருள் புரியட்டும்.
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in