என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

தமிழ், தெலுங்கில் ஒரு காலத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்தவர் த்ரிஷா. கடந்த 19 வருடங்களுக்கும் மேலாக இன்னமும் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் நடித்து முடித்துள்ள 'கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, ராங்கி' ஆகிய படங்கள் இன்னும் வெளியாகவில்லை.
அபூர்வமாய் சமூக வலைத்தளங்கள் பக்கம் வருபவர் த்ரிஷா. தற்போது துபாயில் சுற்றுலாப் பயணத்தில் இருக்கிறார் போலிருக்கிறது- துபாயில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றின் இருப்பிடத்தைக் குறிப்பிட்டு, “என்னைப் பொறுத்தவரை வாழ்க்கை என்பது சாதாரண விஷயமல்ல. அது எப்போதுமே ஒரு அற்புதம்,” எனப் பதிவிட்டுள்ளார்.
அவரது முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்து கொண்ட மகிழ்ச்சியின் வெளிப்பாடோ அது ?.