மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

தமிழ், தெலுங்கில் ஒரு காலத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்தவர் த்ரிஷா. கடந்த 19 வருடங்களுக்கும் மேலாக இன்னமும் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் நடித்து முடித்துள்ள 'கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, ராங்கி' ஆகிய படங்கள் இன்னும் வெளியாகவில்லை.
அபூர்வமாய் சமூக வலைத்தளங்கள் பக்கம் வருபவர் த்ரிஷா. தற்போது துபாயில் சுற்றுலாப் பயணத்தில் இருக்கிறார் போலிருக்கிறது- துபாயில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றின் இருப்பிடத்தைக் குறிப்பிட்டு, “என்னைப் பொறுத்தவரை வாழ்க்கை என்பது சாதாரண விஷயமல்ல. அது எப்போதுமே ஒரு அற்புதம்,” எனப் பதிவிட்டுள்ளார்.
அவரது முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்து கொண்ட மகிழ்ச்சியின் வெளிப்பாடோ அது ?.




