இந்த வாரம் 5 படங்கள் ரிலீஸ் | அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு |
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்தமகன் ராம்குமாரின் வாரிசு தான் துஷ்யந்த். கடந்த 2003லேயே ஹீரோவாக அறிமுகமான இவர் சக்சஸ், மச்சி என இரண்டு படங்களில் மட்டும் நடித்தார். அவை சரியான வரவேற்பு பெறாத நிலையில் சில வருடங்கள் கழித்து தயாரிப்பாளராக மாறி ஒன்றிரண்டு படங்களை தயாரித்தார். இந்தநிலையில் தற்போது அஸ்த்ரா என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் நுழைந்துள்ளார் துஷ்யந்த்.
“நீண்ட நாட்கள் கழித்து நடிப்புக்கு திரும்புவதால் மலையாள திரையுலகில் கால் வைப்பதுதான் சரி என தோன்றியது.. காரணம் அங்கே வில்லனாக நடித்தாலும் இரண்டு காட்சிகளில் வந்துபோகும் கதாபாத்திரம் என்றாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களிடம் பேசவைத்து விடுவார்கள். அதன்மூலம் அடுத்தடுத்த வாய்ப்புகளை எளிதாக கைப்பற்ற முடியும்.. அந்தவகையில் அவர்கள் சொன்ன கதையும் எனது கதாபாத்திரமும் பிடித்து விட்டதால் ஓகே சொல்லிவிட்டேன்” என்கிறார் துஷ்யந்த்.