ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சினிமாவில் மட்டுமல்ல மிகப்பெரிய நிறுவனங்களும் கூட தங்களது விளம்பரப்படங்களில் அல்லு அர்ஜுனை நடிக்க வைக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் ராபிடோ என்கிற நிறுவனத்துக்காக அல்லு அர்ஜுன் நடித்த விளம்பர வீடியோ ஒன்று வெளியானது. இந்த விளம்பரம் மூலம் அவருக்கு புதிய சிக்கலும் தேடிவந்துள்ளது.
இருசக்கர வாகனத்தில் பயணிகளை ஏற்றிச்செல்ல உதவும் ராபிடோ என்கிற ஆப்-பின் வசதிகளை விவரிக்கும் இந்த விளம்பரத்தில் தெலங்கானா அரசு போக்குவரத்து பேருந்துகள் கூட்ட நெரிசலாக இருப்பதாகவும் அவற்றில் பயணிப்பதற்கு பதிலாக ராபிடோ பயன்படுத்துவது சிறந்தது என்றும் அல்லு அர்ஜுன் வசனம் பேசியுள்ளார்.
இது அரசு போக்குவரத்து பேருந்துகளை அவமதிப்பு செய்யும் விதமாக இருப்பதாக தெலங்கானா அரசு போக்குவரத்து கழக நிர்வாக மேலாளர் சஜ்ஜனார் கூறியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசு சேவை நிறுவனங்களை அவமதிப்பு செய்யும் இதுபோன்ற விளம்பரங்களில் நடிப்பதை அல்லு அர்ஜுன் போன்ற நடிகர்கள் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.