7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் | கதை நாயகியான லிஸி ஆண்டனி | முகமூடி அணிந்து ரசிகர்களிடம் நேரடியாக பட விமர்சனம் கேட்ட அக்ஷய் குமார் | பிளாஷ்பேக் : கன்னட நாடகத் துறையின் புரட்சியாளர் | பிளாஷ்பேக் : என்ஜினீயர் மோகன், கிரேஸி மோகன் ஆனது எப்படி? | காஜல் அகர்வால் இயக்குனர் ஆகிறாரா? | த.வெ.க.,வில் இணைகிறாரா அர்ஜூன்? உண்மை என்ன? | திரையுலகில் 50 ஆண்டுகள்: பாக்யராஜ்க்கு பாராட்டு விழா | என்னது, ஸ்ருதிநாராயணன் படத்துக்கு தியேட்டர் கிடைக்கலையா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தின் கதையை இருவேறு காலங்களில் இயக்கிய இயக்குநர் |
பிரபல தெலுங்கு நடிகர் நாக சவுர்யாவின் தந்தை சிவலிங்க பிரசாத். தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இவர் ஐதராபாத் அருகே உள்ள மஞ்சிரேவு பகுதியில் ஒரு பண்ணை வீட்டை படப்பிடிப்புக்காக என்று சொல்லி குத்தகைக்கு எடுத்துள்ளார். அந்த வீட்டை படப்பிடிப்புக்கு பயன்படுத்தாமல் சூதாட்டம் நடத்த பயன்படுத்தியதாக தெரிகிறது.
இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் சிவலிங்க பிரசாத், குத்தகை நிபந்தனைகளை மீறியதாக கைது செய்யப்பட்டார். பின்னர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். பண்ணை வீட்டில் கடந்த அக்டோபர் 31ம் தேதி போலீஸார் சோதனை நடத்தி, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் எம்எல்ஏ ஸ்ரீராம் பத்ரய்யா உள்பட 30 பேரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.