காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

பிரபல தெலுங்கு நடிகர் நாக சவுர்யாவின் தந்தை சிவலிங்க பிரசாத். தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இவர் ஐதராபாத் அருகே உள்ள மஞ்சிரேவு பகுதியில் ஒரு பண்ணை வீட்டை படப்பிடிப்புக்காக என்று சொல்லி குத்தகைக்கு எடுத்துள்ளார். அந்த வீட்டை படப்பிடிப்புக்கு பயன்படுத்தாமல் சூதாட்டம் நடத்த பயன்படுத்தியதாக தெரிகிறது.
இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் சிவலிங்க பிரசாத், குத்தகை நிபந்தனைகளை மீறியதாக கைது செய்யப்பட்டார். பின்னர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். பண்ணை வீட்டில் கடந்த அக்டோபர் 31ம் தேதி போலீஸார் சோதனை நடத்தி, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் எம்எல்ஏ ஸ்ரீராம் பத்ரய்யா உள்பட 30 பேரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.




