திருமணத்திற்கு பிறகு மும்பையில் குடியேறிய சமந்தா! | 'ஜனநாயகன்' டிக்கெட் முன்பதிவு தொடங்கியது! ஜெர்மனியில் 5.5 லட்சம் வரை வசூல்!! | 'தி கேர்ள்ப்ரெண்ட்' பட முழு ஸ்கிரிப்ட்டையும் ஆன்லைனில் அப்லோடு செய்த இயக்குனர் | சென்சார் கெடுபிடி காட்டிய இளம் நடிகரின் பட ரிலீசுக்கு உயர்நீதிமன்றம் கிரீன் சிக்னல் | மலேசியாவில் அஜித்தை சந்தித்த ஸ்ரீ லீலா | சின்னத்திரை நடிகர் சங்கத்தில் பெண்கள் அணி: சங்க தலைவர் பரத் தகவல் | நான் சொல்வதை அவன் கேட்கமாட்டான்: கூல் சுரேஷ் குறித்து சந்தானம் | தெலுங்கு சினிமாவில் ஒற்றுமை இல்லை! - தமன் ஆதங்கம் | 'மனா சங்கரா வரபிரசாந்த் காரு' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு! | பிளாஷ்பேக்: 'நடிப்பிசைப் புலவர்' கே ஆர் ராமசாமியை நாடறியும் நடிகனாக்கிய “பூம்பாவை” |

சினிமாவில் மட்டுமல்ல மிகப்பெரிய நிறுவனங்களும் கூட தங்களது விளம்பரப்படங்களில் அல்லு அர்ஜுனை நடிக்க வைக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் ராபிடோ என்கிற நிறுவனத்துக்காக அல்லு அர்ஜுன் நடித்த விளம்பர வீடியோ ஒன்று வெளியானது. இந்த விளம்பரம் மூலம் அவருக்கு புதிய சிக்கலும் தேடிவந்துள்ளது.
இருசக்கர வாகனத்தில் பயணிகளை ஏற்றிச்செல்ல உதவும் ராபிடோ என்கிற ஆப்-பின் வசதிகளை விவரிக்கும் இந்த விளம்பரத்தில் தெலங்கானா அரசு போக்குவரத்து பேருந்துகள் கூட்ட நெரிசலாக இருப்பதாகவும் அவற்றில் பயணிப்பதற்கு பதிலாக ராபிடோ பயன்படுத்துவது சிறந்தது என்றும் அல்லு அர்ஜுன் வசனம் பேசியுள்ளார்.
இது அரசு போக்குவரத்து பேருந்துகளை அவமதிப்பு செய்யும் விதமாக இருப்பதாக தெலங்கானா அரசு போக்குவரத்து கழக நிர்வாக மேலாளர் சஜ்ஜனார் கூறியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசு சேவை நிறுவனங்களை அவமதிப்பு செய்யும் இதுபோன்ற விளம்பரங்களில் நடிப்பதை அல்லு அர்ஜுன் போன்ற நடிகர்கள் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.




