ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் லூசிபர். இந்த படத்தின் மூலம் நடிகர் பிரித்விராஜ் வெற்றிகரமான இயக்குனராகவும் மாறினார். இந்த படத்தில் மோகன்லாலுக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயை அழைத்துவந்து நடிக்க வைத்திருந்தார் பிரித்விராஜ். விவேக் ஓபராய்க்கும் இந்தப் படம் பெரிய பெயர் பெற்றுத் தந்தது.
இந்த நிலையில் மீண்டும் மலையாள திரையுலகில் வில்லனாகவே ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் விவேக் ஓபராய். ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் தற்போது பிரித்விராஜ் ஹீரோவாக நடித்து வரும் கடுவா என்கிற படத்தில் வில்லனாக நடிக்கிறார் விவேக் ஓபராய். இந்த படத்தில் காட்டு ராஜாவாக கடுவா என்கிற கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடிக்க அவரைப் பிடிப்பதற்காக நியமிக்கப்படும் காட்டிலாகா அதிகாரியாக விவேக் ஓபராய் நடிக்கிறார் இதை குறிப்பிடும் விதமாக "வேட்டைக்காரன் வந்துவிட்டான்.. எச்சரிக்கையாக இரு கடுவா.. இன்று முதல் ஆக்சன் ஆரம்பம்" என்று குறிப்பிட்டு படப்பிடிப்பில் தான் கலந்து கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் விவேக் ஓபராய்.