ஏப்., 30ல் கிஸ் முதல் பாடல் வெளியீடு | ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பாணியில் உருவாகியுள்ள நரிவேட்டை | தொடரும் படம் பார்க்க வந்த ரசிகர்களிடம் வீடியோ காலில் உரையாடிய மோகன்லால் | ஐஸ்வர்யா ராய் என்னை சிறுவனாக நினைத்ததில்லை : ரன்பீர் கபூர் | ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் படத்தில் நட்புக்காக நடனமாடும் ஸ்ருதிஹாசன் | சேப்பாக்கத்தில் சென்னை மேட்ச் பார்த்து ரசித்த அஜித், சிவகார்த்திகேயன் | தமிழ் சினிமாவில் சிக்ஸ்பேக் சண்டை | பிளாஷ்பேக்: இளையராஜா முடிவு செய்த கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக் : தமிழில் வெளியான முதல் கன்னடப் படம் | சசிகுமார் ஜோடியாக நடித்தது ஏன்? : சிம்ரன் விளக்கம் |
தீபாவளித் திருநாள் என்றாலே புதிய படங்களை வெளியிட ஒரு கொண்டாட்டமான நாளாக இருக்கும். அன்றைய தினத்தில் தங்களது படங்கள் வெளிவர வேண்டுமென அனைத்து நடிகர்களும் நினைப்பார்கள். மற்ற எந்த பண்டிகை நாளையும் விட தீபாவளிக்கு அப்படி ஒரு சிறப்பு.
கடந்த வருடம் முதல் ஓடிடி தளங்களிலும் தீபாவளிக்குப் போட்டி ஆரம்பமானது. அப்போது சூர்யா நடித்த 'சூரரைப் போற்று', நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன்' ஆகிய இரண்டு படங்களும் ஓடிடி தளங்களில் வெளியாகின. இரண்டு படங்களுக்குமே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த வருட தீபாவளிக்கும் ஓடிடி தளத்தில் கடும் போட்டி நிலவ உள்ளது. இந்த வருட தீபாவளிக்கும் சூர்யா நடிக்கும் படம் வெளிவருகிறது. 'ஜெய் பீம்' படத்தை நவம்பர் 2ம் தேதியே ஓடிடி தளத்தில் வெளியிடுகிறார்கள். அடுத்து சசிகுமார், சத்யராஜ் நடித்துள்ள 'எம்ஜிஆர் மகன்' படத்தையும் ஓடிடி தளத்தில் தீபாவளிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்கள். இவை தவிர மேலும், சில முன்னணி ஓடிடி நிறுவனங்கள் புதிய படங்களை வெளியிட பேச்சு வார்த்தை நடத்தி வருகிறதாம்.
தீபாவளிக்கு தியேட்டர்களில் 'அண்ணாத்த, எனிமி' மட்டுமே வெளியாக உள்ள நிலையில் ஓடிடி தளங்களில் அவற்றை விட அதிகமான படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.