ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தீபாவளித் திருநாள் என்றாலே புதிய படங்களை வெளியிட ஒரு கொண்டாட்டமான நாளாக இருக்கும். அன்றைய தினத்தில் தங்களது படங்கள் வெளிவர வேண்டுமென அனைத்து நடிகர்களும் நினைப்பார்கள். மற்ற எந்த பண்டிகை நாளையும் விட தீபாவளிக்கு அப்படி ஒரு சிறப்பு.
கடந்த வருடம் முதல் ஓடிடி தளங்களிலும் தீபாவளிக்குப் போட்டி ஆரம்பமானது. அப்போது சூர்யா நடித்த 'சூரரைப் போற்று', நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன்' ஆகிய இரண்டு படங்களும் ஓடிடி தளங்களில் வெளியாகின. இரண்டு படங்களுக்குமே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த வருட தீபாவளிக்கும் ஓடிடி தளத்தில் கடும் போட்டி நிலவ உள்ளது. இந்த வருட தீபாவளிக்கும் சூர்யா நடிக்கும் படம் வெளிவருகிறது. 'ஜெய் பீம்' படத்தை நவம்பர் 2ம் தேதியே ஓடிடி தளத்தில் வெளியிடுகிறார்கள். அடுத்து சசிகுமார், சத்யராஜ் நடித்துள்ள 'எம்ஜிஆர் மகன்' படத்தையும் ஓடிடி தளத்தில் தீபாவளிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்கள். இவை தவிர மேலும், சில முன்னணி ஓடிடி நிறுவனங்கள் புதிய படங்களை வெளியிட பேச்சு வார்த்தை நடத்தி வருகிறதாம்.
தீபாவளிக்கு தியேட்டர்களில் 'அண்ணாத்த, எனிமி' மட்டுமே வெளியாக உள்ள நிலையில் ஓடிடி தளங்களில் அவற்றை விட அதிகமான படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.