இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர் | சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி | கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ? | துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு | பிளாஷ்பேக் : ஒரு பாடலுக்காக 84 ஆயிரம் ஓவியங்கள் | பிளாஷ்பேக்: மூணாறில் படமான முதல் படம் | உண்மை எப்போதும் வெல்லும் : ஆர்த்தி பதிவு; குஷ்பு ஆதரவு | விஜய் அண்ணாவுக்கு நிறைய சவால்கள் இருக்கிறது : சவுந்தர்யா ரஜினி | என் மனைவியை காப்பாற்றுங்க : முதல்வர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை வேண்டுகோள் | விவாகரத்து வரை சினிமாவிற்கு முழுக்கு, என் குடும்பத்தை கெடுத்தவர் மூன்றெழுத்து நடிகை : ரவி மோகன் கண்ணீர் பேட்டி |

புதுச்சேரி: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் பிரபல சினிமா இயக்குனர் ஷங்கரின் மருமகன், சம்பந்தி உள்ளிட்ட ஐந்து பேர் மீது, போக்சோ பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி, துத்திப்பட்டில் கிரிக்கெட் சங்கத்துக்கு சொந்தமான மைதானங்கள் உள்ளன. இங்கு நீர்நிலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அப்போதைய கவர்னர் கிரண்பேடி மைதானத்துக்கு சீல் வைக்க உத்தர விட்டார். மைதானம் மூடப்பட்டதால் முத்திரையர்பாளையத்தில் உள்ள இளங்கோவடிகள் அரசு பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்பட்டது.
அப்போது பயிற்சியாளர் தாமரைக்கண்ணன்(23) தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாக தனியார் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் 16 வயது சிறுமி, கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் புகார் அளித்துள்ளார். அவர்கள் பயிற்சியாளரிடம் மோதல் வேண்டாம் என கூறியதுடன் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து, புதுச்சேரி குழந்தைகள் நலக்குழுவிடம் அச்சிறுமி புகார் செய்தார். குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை நடத்தி, மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். இதன்படி, பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் மீது பாலியல் சீண்டல் வழக்கு பதியப்பட்டது. புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் மற்றொரு பயிற்சியாளர் ஜெயகுமார், கிரிக்கெட் சங்கத் தலைவர் தாமோதரன், செயலர் வெங்கட், கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் உட்பட ஐந்து பேர் மீது நேற்று முன்தினம் போக்சோ பிரிவில் வழக்கு பதியப்பட்டது.
இதில் கிரிக்கெட் கிளப் தலைவர் தாமோதரன் மகன் ரோகித், பிரபல திரைப்பட இயக்குனர் ஷங்கரின் மருமகன் ஆவார். இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. தலைமறைவான ஐந்து பேரையும் கைது செய்ய இரண்டு தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.