வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

கொரோனா இரண்டாவது அலை தாக்கம் குறைந்துள்ள நிலையில், பாலிவுட் சினிமா மறுபடியும் தியேட்டர்களில் தங்களது வெளியீட்டை துவங்கியுள்ளது. அந்த வகையில் தற்போது முதல் பெரிய படமாக ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ள சூர்யவன்ஷி என்கிற படம் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டியுள்ள இயக்குனர் ராஜமவுலி.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ராஜமவுலி கூறும்போது, சூர்யவன்ஷி படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள், இந்த அசாதாரண சூழலில் கிட்டத்தட்ட ஒரு வருடம் படத்தை ரிலீஸ் செய்யாமல் காத்திருந்து தியேட்டர்கள் திறந்த பின்பே ரிலீஸ் செய்துள்ள தயாரிப்பாளரின் மன உறுதியை பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார். இந்த படத்தை ரிலையன்ஸ் என்டர்டைன்மெண்ட் சார்பில் ரோஹித் ஷெட்டி தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.