ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
மும்பையில் சொகுசுக் கப்பலில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன்கான் உட்பட பலர் கைது செய்யப்பட்டார்கள். அதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட ஆரியன்கானுக்கு சில வாரங்களாக ஜாமீன் இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. மேலும் ஆரியன்கானை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே என்பவரு க்கு ரூ 8 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக மகாராஷ்டிரா மாநில அமைச்சர் நவாப் மாலிக் குற்றம் சாட்டியிருந்தார்.
அதையடுத்து அந்த போதைப்பொருள் வழக்கில் இருந்து விசாரணை அதிகாரி சமீர் வான்கடே நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் வான்கடே வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் அதனை மறுத்துள்ளார். அவர் கூறுகையில், ஆரியன்கான் உள்ளிட்ட 6 வழக்குகள் குறித்த விசாரணை டில்லியில் உள்ள சிறப்பு விசாரணைக் குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கினை சிபிஐ அல்லது என்ஐஏ விசாரிக்க உத்தரவிட கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் தான் மனு தாக்கல் செய்துள்ளதாக கூறியுள்ள வான்கடே, தன்னை பணியிடமாற்றம் செய்யவில்லை என்றும் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.