தக்லைப் படத்தின் 'விண்வெளி நாயகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது! | நான் சந்தோஷத்தை வெளியில் தேடியது கிடையாது! - 'குபேரா' பட விழாவில் தனுஷ் பேச்சு | தோழிகள் படைசூழ தாய்லாந்து நாட்டிற்கு டூர் சென்ற கவுரி கிஷன்! | அந்தமான் செல்லும் சாய் தன்சிகா: ஏன் தெரியுமா? | பட விழாவுக்கு வரமுடியாததால் வீடியோகாலில் பேசிய யோகிபாபு | தமிழகத்திலும் அந்த படங்கள் வரும்: கஸ்துாரி கணிப்பு | தம்பிகளா, தள்ளிப்போய் விளையாடுங்க: தனுஷ் ஆவேசம் | பிறந்தநாளன்று இளையராஜா சொன்ன இனிப்பான செய்தி | 'தக் லைப்' படத்திற்கு கர்நாடகாவில் தடை: வழக்கு தொடர்ந்த கமல்ஹாசன் | விஜய் மில்டன் படத்தில் இணைந்த பரத் |
பாலிவுட்டில் அக்சய் குமார், கத்ரினா கைப் நடிப்பில் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள சூர்யவன்ஷி படம் கடந்த வெள்ளியன்று தியேட்டர்களில் வெளியானது. ரோஹித் ஷெட்டி படம் என்றாலே எப்போதுமே ஆக்சன் புல் மீல்ஸாகவே இருக்கும்.. அதேபோல இந்தப்படத்தின் சண்டை காட்சிகளும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. இந்தநிலையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அமிதாப் பச்சன் நடத்தி வரும் கோன் பனேஹா குரோர்பதி சீசன்-13 நிகழ்ச்சியில் அக்சய், காத்ரீனா மற்றும் ரோஹித் ஷெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது படத்தில் இடம்பெற்றுள்ள சில சண்டை காட்சிகளின் கிளிப்புகள் திரையிட்டு காட்டப்பட்டன. குறிப்பாக அக்சய் குமார் ஹெலிகாப்டரில் தொங்கியபடி நடித்திருந்த ஒரு காட்சியை பார்த்ததும் அமிதாப் அதிர்ந்து போனார். அந்த காட்சியை படமாக்கியபோது அக்சய் எடுத்த ரிஸ்க் குறித்து ரோஹித் ஷெட்டி அமிதாப்பிடம் விளக்கினார். அவர்களது முயற்சியை அமிதாப் பாராட்டினாலும், இனி இதுபோன்ற அபாயகரமான சண்டை காட்சிகளில் ரிஸ்க் எடுக்க கூடாது என அக்சய் குமாரை உரிமையுடன் எச்சரிக்கவும் செய்தார்.