சாய் பல்லவியின் ‛ஏக் தீன்' ஹிந்தி படம் டீசருடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு | சிறிய படங்களை கண்டு கொள்ளாத ஓடிடி நிறுவனங்கள் : வசந்தபாலன் காட்டம் | பாலிவுட்டில் பரவும் தனுஷ், மிருணாள் தாகூர் திருமணத் தகவல் | கமலை சந்தித்து ஆசி வாங்கிய ஊர்வசியின் மகள் | திரிஷ்யம் 3 படத்துடன் மோதும் வாழ 2 | மரகத நாணயம் 2 படத்தில் பிரியா பவானி சங்கர் | விஜய் படம் எப்ப ரிலீஸ் : அஜித் படம் அறிவிப்பு எப்ப வரும் | தலைப்பு ‛தி மம்மி ரிட்டர்ன்ஸ்' : ஆனா பேய் படமில்லையாம் | விஜய் சேதுபதி கைவசம் வரிசை கட்டும் படங்கள் | பொங்கல் படங்களில் வின்னர் எது? : 100கோடியை தாண்டுமா பராசக்தி |

பாலிவுட்டில் அக்சய் குமார், கத்ரினா கைப் நடிப்பில் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள சூர்யவன்ஷி படம் கடந்த வெள்ளியன்று தியேட்டர்களில் வெளியானது. ரோஹித் ஷெட்டி படம் என்றாலே எப்போதுமே ஆக்சன் புல் மீல்ஸாகவே இருக்கும்.. அதேபோல இந்தப்படத்தின் சண்டை காட்சிகளும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. இந்தநிலையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அமிதாப் பச்சன் நடத்தி வரும் கோன் பனேஹா குரோர்பதி சீசன்-13 நிகழ்ச்சியில் அக்சய், காத்ரீனா மற்றும் ரோஹித் ஷெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது படத்தில் இடம்பெற்றுள்ள சில சண்டை காட்சிகளின் கிளிப்புகள் திரையிட்டு காட்டப்பட்டன. குறிப்பாக அக்சய் குமார் ஹெலிகாப்டரில் தொங்கியபடி நடித்திருந்த ஒரு காட்சியை பார்த்ததும் அமிதாப் அதிர்ந்து போனார். அந்த காட்சியை படமாக்கியபோது அக்சய் எடுத்த ரிஸ்க் குறித்து ரோஹித் ஷெட்டி அமிதாப்பிடம் விளக்கினார். அவர்களது முயற்சியை அமிதாப் பாராட்டினாலும், இனி இதுபோன்ற அபாயகரமான சண்டை காட்சிகளில் ரிஸ்க் எடுக்க கூடாது என அக்சய் குமாரை உரிமையுடன் எச்சரிக்கவும் செய்தார்.