'டகாய்ட்' பட ரிலீஸை முன்னிட்டு ஹீரோவுடன் திருப்பதி தரிசனம் செய்த மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: புரட்சி நடிகரின் படத்தில், புலியுடன் சண்டையிட்ட புரட்சிப் பெண் திரைக்கலைஞர் | கஞ்சா பயன்படுத்தியதாக மலையாள நடிகரின் மகன் கைது ; தந்தையின் நம்பிக்கையை தகர்த்தார் | சென்சார் போர்டின் இரட்டை நிலைப்பாடு ; தி கேரளா ஸ்டோரி இயக்குனர் குற்றச்சாட்டு | துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை | பாடலை மாதக்கணக்கில் மெருகேற்றும் ஹாரிஸ்: இயக்குனர் ஏ.எல்.விஜய் | நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! |

பாலிவுட்டில் அக்சய் குமார், கத்ரினா கைப் நடிப்பில் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள சூர்யவன்ஷி படம் கடந்த வெள்ளியன்று தியேட்டர்களில் வெளியானது. ரோஹித் ஷெட்டி படம் என்றாலே எப்போதுமே ஆக்சன் புல் மீல்ஸாகவே இருக்கும்.. அதேபோல இந்தப்படத்தின் சண்டை காட்சிகளும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. இந்தநிலையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அமிதாப் பச்சன் நடத்தி வரும் கோன் பனேஹா குரோர்பதி சீசன்-13 நிகழ்ச்சியில் அக்சய், காத்ரீனா மற்றும் ரோஹித் ஷெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது படத்தில் இடம்பெற்றுள்ள சில சண்டை காட்சிகளின் கிளிப்புகள் திரையிட்டு காட்டப்பட்டன. குறிப்பாக அக்சய் குமார் ஹெலிகாப்டரில் தொங்கியபடி நடித்திருந்த ஒரு காட்சியை பார்த்ததும் அமிதாப் அதிர்ந்து போனார். அந்த காட்சியை படமாக்கியபோது அக்சய் எடுத்த ரிஸ்க் குறித்து ரோஹித் ஷெட்டி அமிதாப்பிடம் விளக்கினார். அவர்களது முயற்சியை அமிதாப் பாராட்டினாலும், இனி இதுபோன்ற அபாயகரமான சண்டை காட்சிகளில் ரிஸ்க் எடுக்க கூடாது என அக்சய் குமாரை உரிமையுடன் எச்சரிக்கவும் செய்தார்.