பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

இந்த வருடம் தீபாவளியை துபாயில் கொண்டாடியுள்ளார் மோகன்லால். அதுவும் அன்றைய தினம் துபாயில் தங்கியுள்ள சஞ்சய் தத் வீட்டிற்கு சென்று அவருடன் சேர்ந்து சில மணி நேரங்கள் மகிழ்ச்சியாக செலவிட்டுள்ளார் மோகன்லால். இந்த வருடம் அவர் துபாயில் தீபாவளி கொண்டாட காரணம் இருக்கிறது.
கடந்த வருடம் தான் துபாய் டவுன்டவுனில் 51 அடுக்குகள் கொண்ட கட்டடம் ஒன்றில் புதிய பிளாட் வாங்கினார் மோகன்லால். அதனால் இந்த வருடம் தீபாவளியை தனது புதிய வீட்டில் கொண்டாடியுள்ளார். அதுமட்டுமல்ல, கடந்த வருடம் இதே நவம்பரில் தான் புற்றுநோய் சிகிச்சை பெற்று, துபாய் திரும்பி ஓய்வெடுத்து வந்த நடிகர் சஞ்சய் தத்தை சந்தித்து நலம் விசாரித்தார் மோகன்லால். அதனால் இந்தமுறையும் தீபாவளிக்காக துபாய் சென்றபோது சஞ்சய் தத் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்துள்ளார் மோகன்லால்.