வாழ்க்கை இத்துடன் முடியவில்லை : இளைஞர்களுக்கு சமந்தா அட்வைஸ் | கணவருடன் பிரிவா? - புகைப்படம் வெளியிட்டு பதிலடி கொடுத்த நவ்யா நாயர் | நாகார்ஜுனா பட வாய்ப்புகளை தொடர்ந்து தவிர்க்கும் ராஷ்மிகா | விஷ்ணு மஞ்சு படத்திலிருந்து வெளியேறிய நூபுர் சனோன் | விடுதலை 2ம் பாகத்தில் இணைந்த தினேஷ், மஞ்சு வாரியர் | துருவ நட்சத்திரம் படத்தின் முக்கிய அப்டேட் | மீண்டும் இணையும் ‛மெட்ராஸ்' பட கூட்டணி | பணத்திற்காக கேவலமான நோக்கத்தோடு பரப்புகின்றனர் : சாய்பல்லவி காட்டம் | ரஜினி 170வது படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் இதோ | இறைவன் படத்திற்கு ‛ஏ' சான்றிதழ் |
கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை மருந்து பயன்படுத்திய விருந்து நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன்கானும் கலந்து கொண்டார் என்ற குற்றத்திற்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஷாருக்கானின் மகன் உட்பட 8 பேரை கைது செய்தார்கள். அதையடுத்து நடந்த தீவிர விசாரணைக்கு பிறகு ஆரியன்கான் சிறையில் அடைக்கப்பட்டார். பலமுறை ஷாருக்கான் தரப்பில் இருந்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட பிறகு ஆரியன்கானுக்கு ஜாமீன் கிடைத்தது.
அது குறித்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் பின்னர் ஆரியன்கான் போதை மருந்து எதுவும் பயன்படுத்தவில்லை. அவரிடமிருந்து எந்த போதை பொருளும் பறிமுதல் செய்யப்படவில்லை என்று சொல்லி இந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். அதேசமயம் அவரின் பாஸ்போர்ட் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. பாஸ்போர்ட்டை திரும்ப வழங்கும்படி ஆர்யன் கான் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆர்யன் கானின் பாஸ்போர்ட்டை திருப்பி அவரிடமே அளிக்க உத்தரவிட்டுள்ளது.