புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை மருந்து பயன்படுத்திய விருந்து நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன்கானும் கலந்து கொண்டார் என்ற குற்றத்திற்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஷாருக்கானின் மகன் உட்பட 8 பேரை கைது செய்தார்கள். அதையடுத்து நடந்த தீவிர விசாரணைக்கு பிறகு ஆரியன்கான் சிறையில் அடைக்கப்பட்டார். பலமுறை ஷாருக்கான் தரப்பில் இருந்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட பிறகு ஆரியன்கானுக்கு ஜாமீன் கிடைத்தது.
அது குறித்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் பின்னர் ஆரியன்கான் போதை மருந்து எதுவும் பயன்படுத்தவில்லை. அவரிடமிருந்து எந்த போதை பொருளும் பறிமுதல் செய்யப்படவில்லை என்று சொல்லி இந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். அதேசமயம் அவரின் பாஸ்போர்ட் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. பாஸ்போர்ட்டை திரும்ப வழங்கும்படி ஆர்யன் கான் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆர்யன் கானின் பாஸ்போர்ட்டை திருப்பி அவரிடமே அளிக்க உத்தரவிட்டுள்ளது.