'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
சமந்தா - நாகசைதன்யா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்ய போவதாக அறிவித்து விட்ட நிலையில், தற்போது சாகுந்தலம், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்துள்ள சமந்தா, இதையடுத்து சில படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.
குறிப்பாக, தி பேமிலிமேன்-2 வெப்சீரிஸ் மூலம் ஹந்தியில் அறிமுகமான சமந்தா, தற்போது ஒரு ஹிந்தி படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருக்கிறார். தொடர்ந்து ஹிந்தியில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளார். அதோடு தெலுங்கில் கதையின் நாயகியாக நடிப்பதற்கும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார். அப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் முதல் தொடங்குகிறது. இந்த இரண்டு படங்கள் குறித்த அறிவிப்பை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்போகிறார் சமந்தா.