பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சமந்தா - நாகசைதன்யா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்ய போவதாக அறிவித்து விட்ட நிலையில், தற்போது சாகுந்தலம், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்துள்ள சமந்தா, இதையடுத்து சில படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.
குறிப்பாக, தி பேமிலிமேன்-2 வெப்சீரிஸ் மூலம் ஹந்தியில் அறிமுகமான சமந்தா, தற்போது ஒரு ஹிந்தி படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருக்கிறார். தொடர்ந்து ஹிந்தியில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளார். அதோடு தெலுங்கில் கதையின் நாயகியாக நடிப்பதற்கும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார். அப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் முதல் தொடங்குகிறது. இந்த இரண்டு படங்கள் குறித்த அறிவிப்பை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்போகிறார் சமந்தா.