ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்துவரும் புஷ்பா என்கிற படம் சுகுமார் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட் செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் மிரட்டலான வில்லனாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் நடிக்கும் முதல் தெலுங்கு படமும் இதுதான். செம்மர கடத்தல் பின்னணியை மையமாக வைத்து உருவாகி வரும் இந்தப் படம் கதையின் நீளம் கருதி இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது.
அந்த வகையில் முதல் பாகம் கிறிஸ்துமஸ் பண்டிகை ரிலீஸாக வெளியாக இருக்கிறது என அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் பஹத் பாசில் மற்றும் அல்லு அர்ஜுன் சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகள் மட்டும் படமாக்கப்பட உள்ளன. இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் கலந்து கொள்ளும் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதில் இருவருக்குமான மோதல் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இந்த காட்சிகளை படமாக்கி முடித்தால் முதல் பாகத்திற்கான அனைத்து காட்சிகளும் முடிந்துவிடும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.