மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்துவரும் புஷ்பா என்கிற படம் சுகுமார் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட் செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் மிரட்டலான வில்லனாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் நடிக்கும் முதல் தெலுங்கு படமும் இதுதான். செம்மர கடத்தல் பின்னணியை மையமாக வைத்து உருவாகி வரும் இந்தப் படம் கதையின் நீளம் கருதி இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது.
அந்த வகையில் முதல் பாகம் கிறிஸ்துமஸ் பண்டிகை ரிலீஸாக வெளியாக இருக்கிறது என அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் பஹத் பாசில் மற்றும் அல்லு அர்ஜுன் சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகள் மட்டும் படமாக்கப்பட உள்ளன. இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் கலந்து கொள்ளும் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதில் இருவருக்குமான மோதல் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இந்த காட்சிகளை படமாக்கி முடித்தால் முதல் பாகத்திற்கான அனைத்து காட்சிகளும் முடிந்துவிடும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.