காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் பல மாநிலங்களில் கடந்த மாதமே திறக்கப்பட்ட நிலையில் கேரளாவில் மட்டும் வரும் அக்டோபர் 25-ஆம் தேதி தான் திறக்கப்பட உள்ளன. 50 சதவீத இருக்கை வசதிகளுடன் தியேட்டர்களை திறக்கலாம் என அரசு கூறினாலும் 2 டோஸ் தடுப்பூசி போட்ட பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளது. இது வசூலிலும் நடைமுறையிலும் சிக்கலை ஏற்படுத்தும் என தயாரிப்பாளர்கள் கருதுகின்றனர்.
அதனால் இந்த சூழ்நிலையில் தங்களது படங்களை வெளியிட தயக்கம் காட்டும் பல தயாரிப்பாளர்கள், யாராவது ஒருவர் முதலில் தங்களது படத்தை வெளியிடட்டும் என்றும் அதில் வரும் லாப நஷ்டங்கள், நடைமுறை சிக்கல்களை கவனித்துக் கொண்டு அதன் பிறகு தங்களது படங்களை வெளியிடலாமா வேண்டாமா என தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்துள்ளனர்.
அக்டோபர் 25ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறந்து கொள்ளலாம் என்றாலும் அன்றைய தினம் திங்கள்கிழமை என்பதால் 28 அல்லது 29 தேதிகளில் தான் தியேட்டர்களில் படங்கள் வெளியாகும். என்று தெரிகிறது. அந்த வகையில் முதல் கட்டமாக ஜோசப் மற்றும் ஜகமே தந்திரம் படங்களில் மூலம் புகழ்பெற்ற நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ள. ஸ்டார் என்கிற திரைப்படம் அன்றைய தினம் வெளியாகும் என தெரிகிறது




