காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

பாகுபலிக்கு இணையான தற்போது ஆர்ஆர்ஆர் படத்தையும் பிரமாண்டமாக இயக்கியிருக்கிறார் ராஜமவுலி. ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியாபட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி என பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததோடு தற்போது இறுதிகட்ட பணிகளும் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.
மேலும், ஆர்ஆர்ஆர் படத்தை 2022 ஆம் ஆண்டு சங்கராந்திக்கு வெளியிடப் போவதாக கூறி வந்த ராஜமவுலி, அதையடுத்து வேறு தேதியில் ரிலீஸ் செய்யப்போவதாக கூறி வந்தவர் இன்னமும் உறுதியான தகவலை அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் அடுத்தபடியாக மகேஷ்பாபு நடிக்கும் படத்தை பிரமாண்டமாக இயக்கப்போகிறார் ராஜமவுலி. இந்த படத்திற்கான கதையை அவரது தந்தையான விஜயேந்திர பிரசாத் ஏற்கனவே எழுதிவிட்டநிலையில் தற்போது திரைக்கதை வசனம் எழுதும் பணிகளை ராஜமவுலி தொடங்கி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஆப்பிரிக்காவில் நடக்கும் ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்தை கே.எல்.நாராயணா புரொடக்சன்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.




