அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் |

மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட 100 படங்கள் நடித்து விட்ட நடிகர் பிரித்விராஜ், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மோகன்லாலை வைத்து லூசிபர் என்ற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். முதல் படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற நிலையில், அடுத்ததாக தற்போது இரண்டாவது படத்தையும் மோகன்லாலை ஹீரோவாக வைத்தே ப்ரோ டாடி என்கிற பெயரில் இயக்கி வந்தார். மீனா, கனிகா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் முதல் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
கிட்டத்தட்ட இரண்டு மாதம் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் நேற்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார் பிரித்விராஜ். இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ள பிரித்விராஜ், “இரண்டாவது படத்தையும் இயக்கி முடித்து விட்டேன் மோகன்லாலை கேமராவுக்கு முன்னால் நிற்க வைத்து பார்ப்பது ரொம்பவே ஜாலியான அனுபவமாக இருந்தது. நம்பிக்கை வைத்து இந்த படத்தையும் நான் கேட்ட கலைஞர்களையும் கொடுத்த மோகன்லாலுக்கும், தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூருக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.