நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட 100 படங்கள் நடித்து விட்ட நடிகர் பிரித்விராஜ், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மோகன்லாலை வைத்து லூசிபர் என்ற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். முதல் படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற நிலையில், அடுத்ததாக தற்போது இரண்டாவது படத்தையும் மோகன்லாலை ஹீரோவாக வைத்தே ப்ரோ டாடி என்கிற பெயரில் இயக்கி வந்தார். மீனா, கனிகா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் முதல் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
கிட்டத்தட்ட இரண்டு மாதம் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் நேற்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார் பிரித்விராஜ். இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ள பிரித்விராஜ், “இரண்டாவது படத்தையும் இயக்கி முடித்து விட்டேன் மோகன்லாலை கேமராவுக்கு முன்னால் நிற்க வைத்து பார்ப்பது ரொம்பவே ஜாலியான அனுபவமாக இருந்தது. நம்பிக்கை வைத்து இந்த படத்தையும் நான் கேட்ட கலைஞர்களையும் கொடுத்த மோகன்லாலுக்கும், தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூருக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.