ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
என்றும் மார்கண்டேயன் என்று சொல்லும் அளவுக்கு இன்னும் இளமையாகவே காட்சி அளிக்கும் நடிகர் நடிகர் மம்முட்டி நேற்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். பல திசையில் இருந்தும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன. அதேசமயம் அனைவரையும் பிரமிக்க வைக்கும் விதமாக டாவின்சி சுரேஷ் என்கிற ஓவியர் 20 அடி உயரம் கொண்ட மம்முட்டியின் போர்ட்ரெய்ட் ஓவியத்தை அவரது பிறந்தநாள் பரிசாக உருவாக்கி ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
ஆம்.. சுமார் 6௦௦ மொபைல் போன்கள் மற்றும் 6000 மொபைல் போன் பயன்பாட்டிற்கான உதிரி பாகங்கள் ஆகியவற்றை கொண்டு இந்த ஓவியத்தை உருவாக்கியுள்ளார் என்பதுதான் இந்த பிரமிப்புக்கு காரணம்.. இத்தனை போன்களையும் உதிரி பாகங்களையும் கொடுத்து இதை உருவாக்குவதற்கு பின்னணியில் தூண்டுதலாக இருந்துள்ளார் அனாஸ் என்கிற மொபைல் கடை உரிமையாளர்.. கே-பீஸ் என்பவர் தனக்கு சொந்தமாக உள்ள மினி ஹால் ஒன்றில் இதற்கான இடவசதியை ஏற்பாடு செய்து கொடுத்து உதவியுள்ளார்.