மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
கடந்த இரண்டு வருடங்களுக்குள் தெலுங்கு சினிமாவின் இளம் முன்னணி நடிகராக மாறியுள்ளளார் விஜய் தேவரகொண்டா. இவரது படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவினாலும் கூட இவரை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் சிவா நிர்வானா என்பவர் டைரக்ஷனில் விஜய் தேவரகொண்டா ஒரு படம் நடிப்பதாக ஒப்பந்தமானது, ஆனால் இந்த படம் மேற்கொண்டு வளராமல் அப்படியே நின்றது.
கொரோனா தாக்கம் காரணமாக தான் படம் துவங்குவதற்கு தாமதம் என பலரும் நினைத்துக் கொண்டிருக்க, திடீரென இந்த படத்தை விஜய் தேவரகொண்டா அதே இயக்குனரை வைத்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தற்போது செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இதன் பின்னணியை விசாரித்தால் விஜய் தேவரகொண்டாவின் சம்பளம் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜூவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இந்த படத்தை அப்படியே அவர் கிடப்பில் போட்டு விட்டாராம். அவருக்கு பதிலடி தரும் விதமாக தான் விஜய் தேவரகொண்டா அதே கதையை அதே இயக்குனரை வைத்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத் தயாரிப்பில் நடிக்க தயாராகிவிட்டாராம்.