வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் |

ஒரு காலத்தில் சிரஞ்சீவி படம் வெளியாகிறது என்றால் மற்ற படங்கள் எல்லாம் தங்களது ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துக் கொண்டு அவருக்கு வழி விட்டனர். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறி சிரஞ்சீவி தான் நடித்து வரும் ஆச்சார்யா படத்தை ரிலீஸ் செய்வதற்கு உரிய தேதி கிடைக்காமல் தவித்து வருகிறார்.
கொராட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்து வரும் ஆச்சார்யா படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது உண்மைதான். அதே சமயம் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு நீடித்து வருகிறது. இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டும் என சொல்லப்படுகிறது. இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இதுதான் என முன் கூட்டியே தீர்மானிக்க முடியவில்லை.
தற்போது இரண்டாவது அலை குறைந்துள்ள நிலையில் ஆர்.ஆர்.ஆர், ராதே ஷ்யாம், புஷ்பா, சர்க்கார் வாரி பாட்டா உள்ளிட்ட படங்கள் தீபாவளி, கிறிஸ்துமஸ் பொங்கல் என முக்கியமான பண்டிகை தேதிகளை ஆக்கிரமித்துக் கொண்டன. குறிப்பாக, சங்கராந்தி பண்டிகையில் தனது படத்தை வெளியிடலாம் என நினைத்திருந்தார் சிரஞ்சீவி ஆனால் அந்த தேதியில் மட்டும் தற்போதைய நிலைமையில் 4 பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீசாக இருக்கின்றன
இந்த போட்டியின் காரணமாக இவற்றில் ஏதாவது ஒன்று இரண்டு படங்கள் கூட விலகுவதற்கு வாய்ப்பு உண்டு என்றும் சொல்கிறார்கள். இதனால் பொங்கலுக்கு பிறகு தான் தங்கள் படத்தை வெளியிட்டாக வேண்டுமோ என்கிற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது ஆச்சார்யா படக்குழு.