நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? |
ஒரு காலத்தில் சிரஞ்சீவி படம் வெளியாகிறது என்றால் மற்ற படங்கள் எல்லாம் தங்களது ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துக் கொண்டு அவருக்கு வழி விட்டனர். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறி சிரஞ்சீவி தான் நடித்து வரும் ஆச்சார்யா படத்தை ரிலீஸ் செய்வதற்கு உரிய தேதி கிடைக்காமல் தவித்து வருகிறார்.
கொராட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்து வரும் ஆச்சார்யா படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது உண்மைதான். அதே சமயம் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு நீடித்து வருகிறது. இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டும் என சொல்லப்படுகிறது. இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இதுதான் என முன் கூட்டியே தீர்மானிக்க முடியவில்லை.
தற்போது இரண்டாவது அலை குறைந்துள்ள நிலையில் ஆர்.ஆர்.ஆர், ராதே ஷ்யாம், புஷ்பா, சர்க்கார் வாரி பாட்டா உள்ளிட்ட படங்கள் தீபாவளி, கிறிஸ்துமஸ் பொங்கல் என முக்கியமான பண்டிகை தேதிகளை ஆக்கிரமித்துக் கொண்டன. குறிப்பாக, சங்கராந்தி பண்டிகையில் தனது படத்தை வெளியிடலாம் என நினைத்திருந்தார் சிரஞ்சீவி ஆனால் அந்த தேதியில் மட்டும் தற்போதைய நிலைமையில் 4 பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீசாக இருக்கின்றன
இந்த போட்டியின் காரணமாக இவற்றில் ஏதாவது ஒன்று இரண்டு படங்கள் கூட விலகுவதற்கு வாய்ப்பு உண்டு என்றும் சொல்கிறார்கள். இதனால் பொங்கலுக்கு பிறகு தான் தங்கள் படத்தை வெளியிட்டாக வேண்டுமோ என்கிற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது ஆச்சார்யா படக்குழு.