பிளாஷ்பேக் : அநேக புதுமைகள் படைத்த “ஆயிரத்தில் ஒருவன்” | முதல் முறையாக இணையும் ரவி மோகன், எஸ்.ஜே. சூர்யா! | ரீ ரிலீஸ் ஆகும் விஜய்யின் குஷி, சிவகாசி | 'குபேரா' இயக்குனருக்கு பேனா பரிசளித்த சிரஞ்சீவி | 'மாமன்' படத்தில் சுவாசிகா, பால சரவணனின் நடிப்பு: சூரி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | சசிகுமாரின் 'பிரீடம்' படத்தின் டீசர் வெளியானது! | பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கர்மாவும், கடவுளும் பதிலடி கொடுக்கட்டும்! - பாடகி சின்மயி | ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திருமணத்திற்கு அழைத்த நாகார்ஜுனா | விஜய் நடித்த 'லியோ' படப் பாடல் படப்பிடிப்பு: 35 லட்சம் முறைகேடு புகார் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பில் பிரபல நிறுவனம் |
பிரபல நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யாவின் ‛பின்டு கி பாப்பி' படத்தின் டிரைலரை, நடிகர் அக்ஷய் குமார் வெளியிட்டார். காதல், நகைச்சுவை, பொழுபோக்கு கலந்த ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது.
சுஷாந்த், ஜன்யா ஜோஷி, விதி ஆகியோர் ஹீரோ, ஹீரோயின்களாக அறிமுகமாகிறார்கள். கணேஷ் ஆச்சார்யா, விஜய் ராஜ், முரளி சர்மா, சுனில் பால், அலி அஸ்கர், பூஜா பானர்ஜி ஆகியோரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை விதி ஆச்சார்யா தயாரித்துள்ளார் மற்றும் ஷிவ் ஹரே எழுதி இயக்கியுள்ளார்.
டிரைலரை வெளியிட்டு அக்ஷய் குமார் கூறுகையில், "இந்தப் படத்துக்காகவும் எனது நண்பர் கணேஷ் ஆச்சார்யாவுக்காகவும் இங்கு வந்துள்ளோம். நாங்கள் கிட்டத்தட்ட 30 வருடங்களாக நண்பர்கள். என்னுடைய 'டாய்லெட் ஏக் கதா' படத்துக்காக அவர் 7-8 பாடல்களுக்கு நடனம் அமைத்திருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள்'' என்றார்.
கணேஷ் ஆச்சார்யா கூறுகையில், "இந்தப் படத்தைத் தயாரிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் என் மனைவி விதியை சம்மதிக்க வைத்து, தயாரித்தேன். சுவாமி படத்திலிருந்து இப்போது வரை படங்களை தயாரிக்க முயற்சித்து வருகிறேன். நான் எப்போதும் கஷ்டப்படுகிறேன் ஆனால் கடவுள் எனக்கு உதவுகிறார். என் மனைவி தான் எனது பலம். நான் எப்போதும் புதிய நபர்களுடன் வேலை செய்ய விரும்புகிறேன்'' என்றார்.
இந்தபடம் 2025, பிப்., 21ல் ரிலீஸாகிறது.