பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

இன்றைய தலைமுறைக்கு பி.விட்டலாச்சார்யா பற்றி அதிகம் தெரியாது. காரணம் அவர் அன்று நிகழ்த்திய தொழில்நுட்ப மாயாஜாலம் இப்போது செல்போனில் சர்வசாதாரணமாக காண கிடைக்கிறது. சமூக படங்கள் கோலோச்சிய காலத்தில் அவரின் மாயாஜால படங்கள் கடுமையான விமர்சிக்கப்பட்டது. 'சினிமா என்பது மக்களை மகிழ்விக்கத்தான், அறிவை வளர்க்க புத்தகங்கள் இருக்கிறது' என்பார்.
அவர் நாட்டுப்புற கதைகளில் இருந்து திரைப்படத்திற்கான கதைகளை உருவாக்கினார். அன்றைக்கிருந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை டைனோசர்கள், ராட்சத பல்லிகள் மற்றும் பிற காட்டு விலங்குகளுடன் சண்டையிடும் ஹீரோவைப் பார்த்து பிரமித்துப் போனார்கள். அந்தக் காலத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் இல்லை. அவரது கலை இயக்குனர் நாகராஜ் மற்றும் நிபுணத்துவ ஒளிப்பதிவாளர்கள் எச்.எஸ். வேணு, எஸ்.டி. லால் ஆகியோரின் உதவியுடன், மேட் ஷாட்களைப் பயன்படுத்துவதன் மூலம், அவர் நம்பமுடியாத காட்சிகளை உருவாக்கினார்.
அவர் தனது படங்கள் அனைத்தையும் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் உருவாக்கி பின்னர் அதனை தமிழில் மொழிமாற்றம் செய்தார். 'பெண் குலத்தின் பொன் விளக்கு' என்ற சமூக படத்தையும், 'மந்திரி குமாரன்' என்ற சரித்திர படத்தையும் தமிழில் இயக்கினார். இன்று அவரின் 26வது நினைவு நாள்.