தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
கன்னடத்தில் அறிமுகமாகி பின்னர் தெலுங்கு, தமிழ் மொழிகளிலும் படம் இயக்கியவர் பி.விட்டலாச்சார்யா. சொந்த திரைப்பட நிறுவனத்தை நிறுவி, 1953ல் 'இராச்சிய லெட்சுமி' எனும் கன்னடத் படத்தை தயாரித்து, இயக்கி சினிமாவில் அறிமுகமானார். என்.டி.ராமராவை கதாநாயகனாகக் கொண்டு 19 தெலுங்கு படங்களை இயக்கியுள்ளார். இவரது தெலுங்கு மற்றும் கன்னட படங்கள் தமிழ் மொழியில், மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. அவைகள் இங்கு பெரும் வெற்றி பெற்றது.
ஆரம்பத்தில் குடும்ப பாங்கான சமூக படங்களை இயக்கி வந்த விட்டலாச்சார்யா அதன்பிறகு மாயாஜால படங்களுக்கு மாறினார். ஜெகன்மோகினி, காந்தர்வ கன்னி உள்பட அவர் இயக்கிய மாயாஜால படங்கள் அனைத்தும் கன்னடத்தில் தயாராகி பின்னர் மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டது. சினிமாவில் தொழில்நுட்பங்கள் வளராத காலத்திலேயே ஒளிப்பதிவாளரையும், கலை இயக்குனரையும் வைத்துக் கொண்டு சினிமாவில் மாயாஜாலம் காட்டினார்.
30 படங்களை இயக்கிய விட்டலாச்சார்யா எந்த ஹீரோக்களையும் தேடிச் சென்றதில்லை. அவர் படத்தில் நடிக்க ஹீரோக்கள் காத்திருந்தார்கள். ஒரு முறை தன்னிடம் வாய்ப்பு கேட்ட ஒரு பெரிய ஹீரோவை வைத்து மாயாஜால படம் ஒன்றை இயக்கினார். வலிந்து வாய்ப்பு கேட்ட அந்த ஹீரோ இது மாயாஜால படம்தானே என்று அலட்சியமாக கருதி தினமும் படப்பிடிப்புக்கு தாமதமாக வந்தார். உடனே அவரை படத்திலிருந்து அதிரடியாக நீக்கினார் விட்டலாச்சார்யா.
பாதி படம் முடிந்திருந்த நிலையில் தன்னை தவிர்த்து விட்டு அவரால் படம் இயக்க முடியாது. அப்படி இயக்கினால் தான் நடித்த போர்ஷன்களை திரும்ப படமாக்க வேண்டியது வரும் அது பெரிய நஷ்டத்தை கொடுக்கும் என்ற அந்த ஹீரோ நம்பினார்.
ஆனால் தொடர்ந்து விட்டலாச்சர்யா படப்பிடிப்பை அந்த ஹீரோ இல்லாமலேயே வேகமாக நடத்தினார். இதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த ஹீரோ எப்படி இது சாத்தியம் என்று விசாரித்த போதுதான். அந்த படத்தில் இளவரசாக நடித்த ஹீரோ ஒரு முனிவரின் சாபத்தால் எருமை மாடாக மாறிவிட்டதாக கதையை மாற்றி மீதி கதையை எருமை மாட்டை கொண்டு எடுத்துக் கொண்டிருப்பதாக ஹீரோவுக்கு தகவல் கிடைத்தது. தவறை உணர்ந்த ஹீரோ ஓடிச் சென்று விட்டலாச்சாயரிடம் மன்னிப்பு கேட்டு பிறகு ஓழுங்காக நடித்துக் கொடுத்தார். இன்று அவரது 25வது நினைவு நாள்.