இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
மலையாளத்தில் கிட்டத்தட்ட இருபது வருடங்களாக வில்லன் நடிகராகவும் சில படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்து வந்தவர் தான் நடிகர் பிஜுமேனன். தமிழில் தம்பி, பழனி உள்ளிட்ட சில படங்களில் வில்லனாக நடித்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு, மலையாளத்தில் வெள்ளிமூங்கா என்கிற படத்தில், கதையின் நாயகனாக நடித்திருந்தார் பிஜு மேனன். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, முன்னணி நடிகர்களின் வரிசைக்கு உயர்ந்தார் பிஜுமேனன்.
அந்த படத்தை இயக்கியவர் அறிமுக இயக்குனர் ஜிபு ஜேக்கப். அந்த படத்தை தொடர்ந்து அவருக்கு மோகன்லால் நடித்த 'முந்திரிவல்லிகள் தளிர்க்கும்போல்' என்கிற படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் படம் வெற்றி பெறவில்லை. அதைத் தொடர்ந்து மீண்டும் ஆத்ய ராத்திரி என்கிற படத்தை தன்னை வைத்து இயக்கும் வாய்ப்பைத் தந்தார் பிஜுமேனன் அந்த படமும் தோல்வியை தழுவியது.
தற்போது கர்ணன் பட நாயகி ரஜிஷா விஜயனை வைத்து 'எல்லாம் சரியாகும்' என்கிற படத்தை இயக்கி உள்ளார் ஜிபு ஜேக்கப். இந்த நிலையில் ஜிபு ஜேக்கப்புக்கு கைகொடுத்து தூக்கிவிடும் விதமாக, மீண்டும் அவரது டைரக்ஷனில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் பிஜுமேனன். தற்போது அவர் எடுத்து வரும் பட டைட்டில் பாணியில் சொல்வதென்றால் இனி ஜிபு ஜேக்கப்பிற்கு எல்லாம் சரியாகும் என்று சொல்லலாம்.