தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபத்தில் பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் வக்கீல் சாப் என்கிற படம் வெளியாகி, ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த பட தயாரிப்பாளருக்கு தற்போது ஒரு மொபைல் நம்பரால் புதிய சிக்கல் எழுந்துள்ளது. கதைப்படி படத்தில் வில்லன் ஆட்களில் ஒருவர், கையில் வைத்திருக்கும் மொபைல் போனுக்கு, அந்த படத்தில் நடித்துள்ள அஞ்சலியின் மார்பிங் செய்யப்பட்ட போட்டோ ஒன்று, வாட்ஸ் அப்பில் அனுப்பி வைக்கப்படும்.. அந்த எண் திரையில் காட்டப்படும்போது பார்ப்பவர்களுக்கு பளிச்சென தெரியும் வகையில் இருந்தது.
இந்த நிலையில் அந்த தொலைபேசி எண் தனக்குரியது என்றும், அந்த நம்பரை தனது அனுமதி இல்லாமல் படத்தில் பயன்படுத்தியதால், தொடர்ந்து தனக்கு அருவருக்கத்தக்க வகையில் தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டே இருப்பதாகவும் பஞ்சகுட்டா பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவர் தயாரிப்பாளர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் சுதாகரின் வழக்கறிஞர் மூலமாக தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.