சூர்யாவிற்கு ஜோடியாக நஸ்ரியா! | தனுஷூக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை? | தெலுங்கு சினிமா பக்கம் கவனத்தை திருப்பிய கார்த்திக் சுப்பராஜ்! | கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இணைந்து நடிக்கும் புதிய படம்! | ஹிந்தியில் ரீமேக் ஆகும் டிராகன்! | பக்தி முதல் காமெடி வரை: இந்த வாரம் வரிசை கட்டும் ஓடிடி ரிலீஸ் | ‛காட்டி' புரமோஷனுக்கு வராமல் எக்ஸ் தளத்தில் 'சாட்டிங்' மட்டும் செய்த அனுஷ்கா | வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் 'கண்ணப்பா' | மேற்கத்திய நாடுகள் பிரச்னையைப் பேசும் 'மதராஸி' | காதலனுக்காக தயாரிப்பாளரான நடிகை |
சமீபத்தில் பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் வக்கீல் சாப் என்கிற படம் வெளியாகி, ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த பட தயாரிப்பாளருக்கு தற்போது ஒரு மொபைல் நம்பரால் புதிய சிக்கல் எழுந்துள்ளது. கதைப்படி படத்தில் வில்லன் ஆட்களில் ஒருவர், கையில் வைத்திருக்கும் மொபைல் போனுக்கு, அந்த படத்தில் நடித்துள்ள அஞ்சலியின் மார்பிங் செய்யப்பட்ட போட்டோ ஒன்று, வாட்ஸ் அப்பில் அனுப்பி வைக்கப்படும்.. அந்த எண் திரையில் காட்டப்படும்போது பார்ப்பவர்களுக்கு பளிச்சென தெரியும் வகையில் இருந்தது.
இந்த நிலையில் அந்த தொலைபேசி எண் தனக்குரியது என்றும், அந்த நம்பரை தனது அனுமதி இல்லாமல் படத்தில் பயன்படுத்தியதால், தொடர்ந்து தனக்கு அருவருக்கத்தக்க வகையில் தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டே இருப்பதாகவும் பஞ்சகுட்டா பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவர் தயாரிப்பாளர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் சுதாகரின் வழக்கறிஞர் மூலமாக தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.