அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ், பிரித்விராஜை வைத்து இயக்கிய 'மும்பை போலீஸ்' என்கிற படம் சூப்பர் ஹிட்டானது. வழக்கமான போலீஸ் திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு த்ரில்லர் படமாக உருவான இந்த படம் கிளைமாக்ஸ் டுவிஸ்ட்டுக்காகவும், படத்தில் கையாளப்பட்ட வித்தியாசமான ஒரு விஷயத்திற்காகவும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்தநிலையில் அந்த படம் வெளியாகி நேற்றோடு எட்டு வருடங்களை கடந்து உள்ளது
இதுகுறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ், மேலும் இந்த படம் விரைவில் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது என்றும் அறிவித்துள்ளார். தொடர்ந்து பல வருடங்களாகவே இந்த படத்தை நீங்கள் ஏன் ரீமேக் செய்யக்கூடாது என, தன்னிடம் பலர் கேட்டு வந்ததாகவும், தற்போது அதற்கு உரிய நேரம் வந்து விட்டதாகவும் கூறியுள்ளார் ரோஷன் ஆண்ட்ரூஸ். தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் சல்யூட் என்கிற படத்தை இயக்கி வரும் ரோஷன் ஆண்ட்ரூஸ், அதை முடித்துவிட்டு இந்தப்படத்தை இயக்குவார் என தெரிகிறது.
ஆனால் இந்த படம் எந்த மொழியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது என்பது பற்றியெல்லாம் எந்த தகவலும் அவர் கொடுக்கவில்லை. அதேசமயம் எந்த மொழிக்கும் பொருந்தும் கதைக்களம் என்பதாலும், ஏற்கனவே ரோஷன் ஆண்ட்ரூஸ் தமிழில் 36 வயதினிலே என்கிற படத்தை இயக்கி இருப்பதாலும் இந்த படம் தமிழில் ரீமேக்காவதற்கே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது