'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ், பிரித்விராஜை வைத்து இயக்கிய 'மும்பை போலீஸ்' என்கிற படம் சூப்பர் ஹிட்டானது. வழக்கமான போலீஸ் திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு த்ரில்லர் படமாக உருவான இந்த படம் கிளைமாக்ஸ் டுவிஸ்ட்டுக்காகவும், படத்தில் கையாளப்பட்ட வித்தியாசமான ஒரு விஷயத்திற்காகவும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்தநிலையில் அந்த படம் வெளியாகி நேற்றோடு எட்டு வருடங்களை கடந்து உள்ளது
இதுகுறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ், மேலும் இந்த படம் விரைவில் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது என்றும் அறிவித்துள்ளார். தொடர்ந்து பல வருடங்களாகவே இந்த படத்தை நீங்கள் ஏன் ரீமேக் செய்யக்கூடாது என, தன்னிடம் பலர் கேட்டு வந்ததாகவும், தற்போது அதற்கு உரிய நேரம் வந்து விட்டதாகவும் கூறியுள்ளார் ரோஷன் ஆண்ட்ரூஸ். தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் சல்யூட் என்கிற படத்தை இயக்கி வரும் ரோஷன் ஆண்ட்ரூஸ், அதை முடித்துவிட்டு இந்தப்படத்தை இயக்குவார் என தெரிகிறது.
ஆனால் இந்த படம் எந்த மொழியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது என்பது பற்றியெல்லாம் எந்த தகவலும் அவர் கொடுக்கவில்லை. அதேசமயம் எந்த மொழிக்கும் பொருந்தும் கதைக்களம் என்பதாலும், ஏற்கனவே ரோஷன் ஆண்ட்ரூஸ் தமிழில் 36 வயதினிலே என்கிற படத்தை இயக்கி இருப்பதாலும் இந்த படம் தமிழில் ரீமேக்காவதற்கே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது