அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
தெலுங்குத் திரையுலகின் சீனியர் ஹீரோவான சிரஞ்சீவி தற்போது 'ஆச்சார்யா' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு 15 நாட்கள் மட்டுமே மீதமிருந்த நிலையில் கொரானோ தொற்று காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மீண்டும் எப்போது படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று தெரியவில்லை.
இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்காமல் வேறு எந்தப் படத்திலும் நடிக்க சிரஞ்சீவி விரும்பவில்லையாம். அதனால், அவர் நடிக்க வேண்டிய அனைத்துப் படங்களையும் தள்ளி வைத்துவிட்டார் என்கிறார்கள்.
மலையாளத்தில் வெளிவந்த 'லூசிபர்' படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய பூஜையும் நடந்தது. சிரஞ்சீவி நடிக்கும் அப்படத்தை மோகன்ராஜா இயக்கவிருந்தார். அடுத்து தமிழில் அஜித் நடித்து வெளிவந்த 'வேதாளம்' படத்தையும் ரீமேக் செய்ய இருந்தார். அவற்றோடு ஒரு நேரடி தெலுங்குப் படத்திலும் நடிக்க முடிவு செய்திருந்தார். இந்த மூன்று படங்களையும் தள்ளி வைத்துவிட்டாராம்.
தற்போதுள்ள நிலையில் 'ஆச்சார்யா' படப்பிடிப்பை மீண்டும் நடத்தி அப்படத்தை வெளியிட ஆகஸ்ட் மாதம் ஆகலாம். அதற்குப் பிறகே நடிக்க வேண்டிய மற்ற மூன்று படங்களைப் பற்றி திட்டமிட உள்ளார்களாம்.