ஒரே படத்துடன் வெளியேற என் அம்மா தான் காரணம் ; மனம் திறந்த மம்முட்டி பட நடிகை | தாத்தா ஆனார் பிரியதர்ஷன் : கல்யாணியின் பிறந்தநாளில் வெளிப்பட்ட உண்மை | இரண்டு மாதத்திற்கு பிறகு ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் கணக்கு மீட்பு | ஷாருக்கான் மகளுக்கு அம்மாவாக நடிக்கும் தீபிகா படுகோன் | பின்சீட்டில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணியுங்கள் : சோனு சூட் உருக்கமான வேண்டுகோள் | ''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி |
தெலுங்குத் திரையுலகின் சீனியர் ஹீரோவான சிரஞ்சீவி தற்போது 'ஆச்சார்யா' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு 15 நாட்கள் மட்டுமே மீதமிருந்த நிலையில் கொரானோ தொற்று காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மீண்டும் எப்போது படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று தெரியவில்லை.
இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்காமல் வேறு எந்தப் படத்திலும் நடிக்க சிரஞ்சீவி விரும்பவில்லையாம். அதனால், அவர் நடிக்க வேண்டிய அனைத்துப் படங்களையும் தள்ளி வைத்துவிட்டார் என்கிறார்கள்.
மலையாளத்தில் வெளிவந்த 'லூசிபர்' படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய பூஜையும் நடந்தது. சிரஞ்சீவி நடிக்கும் அப்படத்தை மோகன்ராஜா இயக்கவிருந்தார். அடுத்து தமிழில் அஜித் நடித்து வெளிவந்த 'வேதாளம்' படத்தையும் ரீமேக் செய்ய இருந்தார். அவற்றோடு ஒரு நேரடி தெலுங்குப் படத்திலும் நடிக்க முடிவு செய்திருந்தார். இந்த மூன்று படங்களையும் தள்ளி வைத்துவிட்டாராம்.
தற்போதுள்ள நிலையில் 'ஆச்சார்யா' படப்பிடிப்பை மீண்டும் நடத்தி அப்படத்தை வெளியிட ஆகஸ்ட் மாதம் ஆகலாம். அதற்குப் பிறகே நடிக்க வேண்டிய மற்ற மூன்று படங்களைப் பற்றி திட்டமிட உள்ளார்களாம்.