தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
குறுகிய காலத்தில் முன்னணி ஹீரோவாக வளர்ச்சி அடைந்தவர் தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா. முன்னணி இயக்குனர்களின் சாய்ஸாக இருக்கும் விஜய் தேவரகொண்டா, தற்போது பூரி ஜெகன்நாத் டைரக்சனில் இந்தியில் உருவாகும் 'லிகர்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் தன்னை கதாநாயகனாக நடிக்க அணுகிய, சிரஞ்சீவி பட இயக்குனருக்கு கால்ஷீட் இல்லையென கூறி கையை விரித்து அதிர்ச்சி அளித்துள்ளார் விஜய் தேவரகொண்டா.
தற்போது சிரஞ்சீவி நடித்து வரும் ஆச்சார்யா படத்தை இயக்கி வருகிறார் பிரபல இயக்குனர் கொரட்டலா சிவா. இன்னொரு பக்கம் தயாரிப்பிலும் இறங்க தீர்மானித்த கொரட்டலா சிவா, இளம் இயக்குனரான வெங்கி குடுமுலா என்பவரை இயக்குனராக்கி படம் தயாரிக்க முடிவு செய்தார். இதற்காக விஜய் தேவரகொண்டாவிடம் கதை சொல்ல நேரம் கேட்டுள்ளனர்..
ஆனால், விஜய் தேவரகொண்டாவோ, தான் இன்னும் மூன்று வருடங்களுக்கு பிசி என்றும் தற்சமயம் கால்ஷீட் இல்லை என்றும் கூறி, கதை கேட்க கூட நேரம் ஒதுக்க மறுத்து விட்டாராம். சிரஞ்சீவி பட இயக்குனருக்கே இந்த நிலைமையா என விஜய் தேவரகொண்டாவின் அதிரடியை பார்த்து திகைத்து போயுள்ளது டோலிவுட்.