ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
குறுகிய காலத்தில் முன்னணி ஹீரோவாக வளர்ச்சி அடைந்தவர் தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா. முன்னணி இயக்குனர்களின் சாய்ஸாக இருக்கும் விஜய் தேவரகொண்டா, தற்போது பூரி ஜெகன்நாத் டைரக்சனில் இந்தியில் உருவாகும் 'லிகர்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் தன்னை கதாநாயகனாக நடிக்க அணுகிய, சிரஞ்சீவி பட இயக்குனருக்கு கால்ஷீட் இல்லையென கூறி கையை விரித்து அதிர்ச்சி அளித்துள்ளார் விஜய் தேவரகொண்டா.
தற்போது சிரஞ்சீவி நடித்து வரும் ஆச்சார்யா படத்தை இயக்கி வருகிறார் பிரபல இயக்குனர் கொரட்டலா சிவா. இன்னொரு பக்கம் தயாரிப்பிலும் இறங்க தீர்மானித்த கொரட்டலா சிவா, இளம் இயக்குனரான வெங்கி குடுமுலா என்பவரை இயக்குனராக்கி படம் தயாரிக்க முடிவு செய்தார். இதற்காக விஜய் தேவரகொண்டாவிடம் கதை சொல்ல நேரம் கேட்டுள்ளனர்..
ஆனால், விஜய் தேவரகொண்டாவோ, தான் இன்னும் மூன்று வருடங்களுக்கு பிசி என்றும் தற்சமயம் கால்ஷீட் இல்லை என்றும் கூறி, கதை கேட்க கூட நேரம் ஒதுக்க மறுத்து விட்டாராம். சிரஞ்சீவி பட இயக்குனருக்கே இந்த நிலைமையா என விஜய் தேவரகொண்டாவின் அதிரடியை பார்த்து திகைத்து போயுள்ளது டோலிவுட்.