ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சுகுமார். அவர் கடைசியாக இயக்கிய ராம்சரண், சமந்தா நடித்த ரங்கஸ்தலம் பெரும் வெற்றியைப் பெற்றது. தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தை இயக்கி வருகிறார்.
சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கும் சுகுமார் உப்பெனா படத்தை மற்றொரு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தார். சமீபத்தில் வெளிவந்த இப்படம் முந்தைய புதுமுகங்களின் சாதனைகளை முறியடித்து பெரும் வசூலைக் குவித்து வருகிறது.
இப்படத்திற்காக மொத்த முதலீட்டையும் மைத்ரி நிறுவனம்தான் செய்ததாம். படத்தின் தயாரிப்பு மேற்பார்வை, கிரியேட்டிவ் மேற்பார்வை ஆகிய பணிகளை சுகுமார் செய்தாராம். அதற்காக லாபத்தில் அவருக்கு 50 சதவீதம் என்பதுதான் ஒப்பதமாம். தற்போது படம் 50 கோடி லாபத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. எனவே, எந்த பண முதலீடும் இல்லாமல் அவர் 25 கோடி வரை சம்பாதிக்கப் போகிறார் என டோலிவுட்டில் ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள்.
ஆனால், படத்தின் உருவாக்கத்தில் அவருக்கிருக்கும் மிகப் பெரும் பங்குதான் இந்த அளவிற்கு வெற்றியைக் கொடுத்தது என்பதை மறந்து சிலர் பேசுகிறார்கள் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.




