ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சுகுமார். அவர் கடைசியாக இயக்கிய ராம்சரண், சமந்தா நடித்த ரங்கஸ்தலம் பெரும் வெற்றியைப் பெற்றது. தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தை இயக்கி வருகிறார்.
சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கும் சுகுமார் உப்பெனா படத்தை மற்றொரு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தார். சமீபத்தில் வெளிவந்த இப்படம் முந்தைய புதுமுகங்களின் சாதனைகளை முறியடித்து பெரும் வசூலைக் குவித்து வருகிறது.
இப்படத்திற்காக மொத்த முதலீட்டையும் மைத்ரி நிறுவனம்தான் செய்ததாம். படத்தின் தயாரிப்பு மேற்பார்வை, கிரியேட்டிவ் மேற்பார்வை ஆகிய பணிகளை சுகுமார் செய்தாராம். அதற்காக லாபத்தில் அவருக்கு 50 சதவீதம் என்பதுதான் ஒப்பதமாம். தற்போது படம் 50 கோடி லாபத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. எனவே, எந்த பண முதலீடும் இல்லாமல் அவர் 25 கோடி வரை சம்பாதிக்கப் போகிறார் என டோலிவுட்டில் ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள்.
ஆனால், படத்தின் உருவாக்கத்தில் அவருக்கிருக்கும் மிகப் பெரும் பங்குதான் இந்த அளவிற்கு வெற்றியைக் கொடுத்தது என்பதை மறந்து சிலர் பேசுகிறார்கள் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.