நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
அறிமுக நடிகர்களான வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி நாயகன், நாயகியாக நடித்து வெளிவந்த 'உப்பெனா' திரைப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பும், வெற்றியும் தெலுங்கு திரையுலகத்தினரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா தாக்கத்திற்குப் பிறகு மக்கள் தியேட்டர்களுக்கு எப்படி வருவார்கள் என்ற சந்தேகத்தை இப்படம் போக்கியிருக்கிறது. இதுவரையிலும் 50 கோடிக்கும் மேல் இந்தப் படம் பங்குத் தொகையாக கொடுத்துவிட்டது என படத்தை வாங்கியவர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
அடுத்து ஓடிடியில் வெளியிடும் உரிமையை பிரபல நிறுவனமான நெட்பிளிக்ஸ் மிக அதிக விலைக்குக் கேட்டு ஆச்சரியப்படுத்தி இருக்கிறதாம். சுமார் 7 கோடி வரை தரத் தயாராக இருக்கிறார்களாம். அறிமுக நடிகர்களின் படத்திற்கு இந்த அளவிற்கு விலை என்பது பெரிய தொகை.
இன்னமும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தை ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் ஒடிடியில் வெளியிட பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.