புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
அறிமுக நடிகர்களான வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி நாயகன், நாயகியாக நடித்து வெளிவந்த 'உப்பெனா' திரைப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பும், வெற்றியும் தெலுங்கு திரையுலகத்தினரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா தாக்கத்திற்குப் பிறகு மக்கள் தியேட்டர்களுக்கு எப்படி வருவார்கள் என்ற சந்தேகத்தை இப்படம் போக்கியிருக்கிறது. இதுவரையிலும் 50 கோடிக்கும் மேல் இந்தப் படம் பங்குத் தொகையாக கொடுத்துவிட்டது என படத்தை வாங்கியவர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
அடுத்து ஓடிடியில் வெளியிடும் உரிமையை பிரபல நிறுவனமான நெட்பிளிக்ஸ் மிக அதிக விலைக்குக் கேட்டு ஆச்சரியப்படுத்தி இருக்கிறதாம். சுமார் 7 கோடி வரை தரத் தயாராக இருக்கிறார்களாம். அறிமுக நடிகர்களின் படத்திற்கு இந்த அளவிற்கு விலை என்பது பெரிய தொகை.
இன்னமும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தை ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் ஒடிடியில் வெளியிட பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.