பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இந்திய சினிமாவையும், போதை பொருளையும் பிரிக்க முடியாது என்கிற அளவிற்கு சினிமாவுக்கும், போதை பழக்கத்துக்கும் நெருக்கம் இருப்பது வெட்டவெளிச்சமாகி இருகிறது. வட இந்திய சினிமாவில் ரியா சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தென் இந்தியாவில் ராகினி திரிவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தற்போது மேலும் ஒரு தெலுங்கு நடிகை கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மும்பை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு மும்பையில் உள்ள பல நட்சத்திர ஓட்டல்களில் போதை பொருள் புழக்கம் தாராளமாக நடப்பதாக தகவல் வந்தது. இதை தொடர்ந்து போலீசார் நட்சத்திர ஓட்டலில் சோதனை நடத்தியபோது கணிசமான போதை பொருட்களுடன் பெண் ஒருவர் சிக்கினார். அவர் அங்குள்ள விவிஐபிக்களுக்கு சப்ளை செய்வதற்காக வந்தவர் என்றும் தெரிந்தது.
போலீசார் அவரிடம் விசாரித்ததில் அவரது பெயர் சுவேதா குமாரி என்பதும், அவர் ரிங் மாஸ்டர் என்ற கன்னடப் படத்திலும், தெலுங்கில் 10க்கும் மேற்பட்ட படங்களில் 2வது நாயகியாக நடித்திருப்பதும் தெரிய வந்தது. சுவேதாவிடம் இருந்து 10 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தெலுங்கு பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.