ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

மலையாள திரையுலகில் கடந்த வருடம் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி, நடிகைகள் உள்ளிட்ட பெண்கள் பலர் பாலியல் ரீதியாக தொந்தரவுக்கு ஆளாகின்றனர் என்கிற விஷயத்தை உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து பல பிரபலங்கள் இந்த குற்றச்சாட்டில் சிக்கினர். ஒருவழியாக அது அடங்கிய நிலையில் கடந்த சில மாதங்களாக மலையாள திரையுலகில் போதை பொருள் பழக்கம் அதிகரித்து வருகிறது என்கிற புதிய குற்றச்சாட்டு எழுந்தது. இதில் பிரபல வில்லன் நடிகர் உள்ளிட்ட ஒரு சில நடிகர்கள், இயக்குனர்கள் சிக்கி கைதான சம்பவமும் நடந்தது. இந்த நிலையில் இப்படி போதைப் பொருள் பயன்படுத்துவதற்கு என்று படத்தின் பட்ஜெட்டில் சிறப்பு தொகை ஒன்று ஒதுக்கப்படுகிறது என ஒரு பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார் பிரபல தயாரிப்பாளர் சான்ட்ரா தாமஸ்.
மலையாள திரைகளில் தொடர்ந்து படங்களை தயாரித்து வரும் இவருக்கும் மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள சிலருக்கும் சமீப காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. குறிப்பாக மலையாள தயாரிப்பாளர் சங்கம், தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறது என தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார் சான்ட்ரா தாமஸ்.. அந்த வகையில் படப்பிடிப்புகளில் போதைப்பொருள் பழக்கம் சமீப நாட்களாகவே அதிகரித்து வருகிறது என்றும் இப்படி போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு வசதியாக படப்பிடிப்பு நடக்கும் இடங்களிலேயே தனி ரூம் வசதி செய்து கொடுக்கப்படுகிறது என்றும் ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
இப்படி இவர்களுக்கு போதைப்பொருள் வசதி செய்து கொடுப்பதற்காகவே படத்தின் பட்ஜெட்டில் ஒரு தொகை தனியாக ஒதுக்கப்படுகிறது என்றும் இது குறித்து சம்பந்தப்பட்ட நடிகர்கள் அல்லது தொழில்நுட்ப கலைஞர்களிடம் ஏதாவது கேட்டால், அதனால் படப்பிடிப்பு நின்று விடுமோ என்கிற பயத்தில் தயாரிப்பாளர்கள் அமைதியாக இருந்து விடுகிறார்கள் என்றும் கூறியுள்ளார் சான்ட்ரா தாமஸ்.