கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல் | ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? | விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் | அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு | சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம் | பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல் | செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் |
இன்றைய தேதியில் மலையாளத்தில் அதிக படங்களில் நடிக்கும் இரண்டு நடிகர்களில் ஒருவர் பிரித்விராஜ். இன்னொருவர் டொவினோ தாமஸ். இதில் பிரித்விராஜ் ஆடுஜீவிதம், கடுவா, ஜனகனமன, கோல்டு கேஸ், குருதி என கைநிறைய படங்களை வைத்திருக்கும் நிலையில் தற்போது தீர்ப்பு என்கிற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகியாக இஷா தல்வார் நடிக்கிறார். ரணம் படத்தி தொடர்ந்து இவர்கள் இருவரும் மீண்டும் இந்தப்படத்தில் ஜோடி சேர்கின்றனர்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரியில் துவங்குகிறது. திலீப்-சித்தார்த் நடித்த கம்மார சம்பவம் படத்தை இயக்கிய ரதீஷ் அம்பாட் இந்தப்படத்தை இயக்குகிறார். அந்தப்படத்திற்கு கதை எழுதிய நடிகர் முரளி கோபி தான் இந்தப்படத்திற்கும் கதை எழுதுகிறார்.. அதுமட்டுமல்ல, பிரித்விராஜ், முதன்முறையாக இயக்குனராக மாறி, மோகன்லாலை வைத்து இயக்கிய 'லூசிபர்' என்கிற சூப்பர் ஹிட் படத்தின் கதையை எழுதியவரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது..