தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி |
இன்றைய தேதியில் மலையாளத்தில் அதிக படங்களில் நடிக்கும் இரண்டு நடிகர்களில் ஒருவர் பிரித்விராஜ். இன்னொருவர் டொவினோ தாமஸ். இதில் பிரித்விராஜ் ஆடுஜீவிதம், கடுவா, ஜனகனமன, கோல்டு கேஸ், குருதி என கைநிறைய படங்களை வைத்திருக்கும் நிலையில் தற்போது தீர்ப்பு என்கிற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகியாக இஷா தல்வார் நடிக்கிறார். ரணம் படத்தி தொடர்ந்து இவர்கள் இருவரும் மீண்டும் இந்தப்படத்தில் ஜோடி சேர்கின்றனர்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரியில் துவங்குகிறது. திலீப்-சித்தார்த் நடித்த கம்மார சம்பவம் படத்தை இயக்கிய ரதீஷ் அம்பாட் இந்தப்படத்தை இயக்குகிறார். அந்தப்படத்திற்கு கதை எழுதிய நடிகர் முரளி கோபி தான் இந்தப்படத்திற்கும் கதை எழுதுகிறார்.. அதுமட்டுமல்ல, பிரித்விராஜ், முதன்முறையாக இயக்குனராக மாறி, மோகன்லாலை வைத்து இயக்கிய 'லூசிபர்' என்கிற சூப்பர் ஹிட் படத்தின் கதையை எழுதியவரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது..