மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி | பிளாஷ்பேக் : இயக்குனர் அனு மோகனை தெரியுமா? | பிளாஷ்பேக் : சினிமா பார்க்கச் சொல்லி உருவான தனிப்பாடல் | 2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல | அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | 'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் |

புலி முருகன்' படத்தில் தான் ஏற்று நடித்த முருகன் கேரக்டருக்கு அப்படியே முற்றிலும் மாறான ஒரு குடும்ப சம்சாரியாக தற்போது முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் மோகன்லால்.. படத்தில் இவருக்கு ஜோடியாக, மனைவியாக மீண்டும் இணைந்து நடிக்கிறார் மீனா.. 'வெள்ளிமூங்கா' என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய ஜிபு ஜேக்கப் இயக்கம் இரண்டாவது படமே மோகன்லால் நம்ம ஊர் 'கபாலி' ரஞ்சித் அளவுக்கு இவர் மேலும் இந்தப்படத்தின் மேலும் எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
இந்தப்படம் கணவன் மனைவிக்குள் இழையோடும் காதல் பற்றிய கருத்தையும் சொல்கிறதாம். அதனால் இந்தப்படத்திற்காக ஒரு போட்டியை மோகன்லால் தனது வாயாலேயே அறிவித்துள்ளார்.. அதாவது ஆதர்ச கணவன்மார்கள் தங்களது மனைவி தான் தனது வாழ்க்கை என்பதை அவர்களிடம் ரொமான்டிக்காக வெளிப்படுத்தும் விதமாக 'மை லைப் மை ஒய்ப்' என்கிற வாசகத்தை சொல்லி, அதை 30 வினாடிகள் ஓடும் வீடியோவாக படமாக்கி அனுப்பும்படி கூறியுள்ளார்.. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஐந்து தம்பதிகள், இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மோகன்லாலுடன் கலந்துகொள்வதுடன் அவர் கையால் சிறப்பு பரிசு பெரும் பாக்கியசாலிகளும் ஆகிறார்கள்.