நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

மலையாள திரையுலகில் இதுநாள்வரை வெளியான படங்களில் அதிகப்படியான வசூலை ஈட்டிய முதல் மூன்று படங்களுமே மோகன்லாலின் படங்களாக அமைந்துவிட்ட சாதனையைப்பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறோம்.. முதல் இடத்தை பிடித்திருந்த 'த்ரிஷ்யம்' படத்தை, அதற்குப்பின் வெளியான மோகன்லாலின் 'ஒப்பம்' படம் மெதுவாக நெருங்கி வர, கடந்த மாதம் வெளியான மோகன்லாலின் இன்னொரு படமான புலி முருகனோ, ஹைஸ்பீடில் ஓவர்டேக் செய்து முதல் இடத்தை தக்கவைத்துக்கொண்டு விட்டது.. அந்தவகையில் த்ரிஷ்யம் படம் வேறு வழியின்றி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது..
அடுத்து இன்னொரு இடியாக இப்போது அந்த சாதனையையும் 'ஒப்பம்' படம், தட்டிப்பறித்துகொண்டுள்ளது. உலகெங்கிலும் சேர்த்த மொத்த வசூலை கணக்கிடும்போது இப்போது 'ஒப்பம்' படமும் த்ரிஷ்யம்' படத்தை ஓவர்டேக் செய்துவிட்டது.. இதற்கு முன்னதாக த்ரிஷ்யம் படம் கேரளாவில் மட்டும் சுமார் 42.5 கோடி ரூபாய் வசூலித்திருந்தது. 'ஒப்பம்' படமோ இப்போது 78 நாட்களில் கேரளாவில் மட்டும் 42.7 வசூலித்து இரண்டாம் இடத்தை பிடித்து விட்டது. இன்னும் 20 தியேட்டர்களில் ஓடிக்கொண்டும் இருக்கிறது 'ஒப்பம்'..