என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

மலையாள திரையுலகில் இதுநாள்வரை வெளியான படங்களில் அதிகப்படியான வசூலை ஈட்டிய முதல் மூன்று படங்களுமே மோகன்லாலின் படங்களாக அமைந்துவிட்ட சாதனையைப்பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறோம்.. முதல் இடத்தை பிடித்திருந்த 'த்ரிஷ்யம்' படத்தை, அதற்குப்பின் வெளியான மோகன்லாலின் 'ஒப்பம்' படம் மெதுவாக நெருங்கி வர, கடந்த மாதம் வெளியான மோகன்லாலின் இன்னொரு படமான புலி முருகனோ, ஹைஸ்பீடில் ஓவர்டேக் செய்து முதல் இடத்தை தக்கவைத்துக்கொண்டு விட்டது.. அந்தவகையில் த்ரிஷ்யம் படம் வேறு வழியின்றி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது..
அடுத்து இன்னொரு இடியாக இப்போது அந்த சாதனையையும் 'ஒப்பம்' படம், தட்டிப்பறித்துகொண்டுள்ளது. உலகெங்கிலும் சேர்த்த மொத்த வசூலை கணக்கிடும்போது இப்போது 'ஒப்பம்' படமும் த்ரிஷ்யம்' படத்தை ஓவர்டேக் செய்துவிட்டது.. இதற்கு முன்னதாக த்ரிஷ்யம் படம் கேரளாவில் மட்டும் சுமார் 42.5 கோடி ரூபாய் வசூலித்திருந்தது. 'ஒப்பம்' படமோ இப்போது 78 நாட்களில் கேரளாவில் மட்டும் 42.7 வசூலித்து இரண்டாம் இடத்தை பிடித்து விட்டது. இன்னும் 20 தியேட்டர்களில் ஓடிக்கொண்டும் இருக்கிறது 'ஒப்பம்'..