இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
மலையாள திரையுலகில் இதுநாள்வரை வெளியான படங்களில் அதிகப்படியான வசூலை ஈட்டிய முதல் மூன்று படங்களுமே மோகன்லாலின் படங்களாக அமைந்துவிட்ட சாதனையைப்பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறோம்.. முதல் இடத்தை பிடித்திருந்த 'த்ரிஷ்யம்' படத்தை, அதற்குப்பின் வெளியான மோகன்லாலின் 'ஒப்பம்' படம் மெதுவாக நெருங்கி வர, கடந்த மாதம் வெளியான மோகன்லாலின் இன்னொரு படமான புலி முருகனோ, ஹைஸ்பீடில் ஓவர்டேக் செய்து முதல் இடத்தை தக்கவைத்துக்கொண்டு விட்டது.. அந்தவகையில் த்ரிஷ்யம் படம் வேறு வழியின்றி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது..
அடுத்து இன்னொரு இடியாக இப்போது அந்த சாதனையையும் 'ஒப்பம்' படம், தட்டிப்பறித்துகொண்டுள்ளது. உலகெங்கிலும் சேர்த்த மொத்த வசூலை கணக்கிடும்போது இப்போது 'ஒப்பம்' படமும் த்ரிஷ்யம்' படத்தை ஓவர்டேக் செய்துவிட்டது.. இதற்கு முன்னதாக த்ரிஷ்யம் படம் கேரளாவில் மட்டும் சுமார் 42.5 கோடி ரூபாய் வசூலித்திருந்தது. 'ஒப்பம்' படமோ இப்போது 78 நாட்களில் கேரளாவில் மட்டும் 42.7 வசூலித்து இரண்டாம் இடத்தை பிடித்து விட்டது. இன்னும் 20 தியேட்டர்களில் ஓடிக்கொண்டும் இருக்கிறது 'ஒப்பம்'..