தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

என்ன இருக்குன்னு இவனெல்லாம் ஹீரோவாக நடிக்க வந்துட்டான்யா” என சில படங்கள் வெளியாகும்போது அந்தப்படத்தில் நடித்த புதுமுக ஹீரோவைப்பற்றி, படம் பார்க்கும் ரசிகர்கள் மட்டுமல்லாது, திரையுலகில் இருக்கும் பலரும் பேசுவது வாடிக்கை தான்.. அவ்வளவு ஏன், சம்பந்தப்பட்ட படக்குழுவில் இருக்கும் ஒரு சிலர் கூட ஏளனமாக பேசுவது உண்டு.. 'அமர் அக்பர் அந்தோணி' என்கிற படத்தில் பிருத்விராஜ், இந்திரஜித், ஜெயசூர்யா என மூன்று பெரிய ஹீஎரோக்களை வைத்து ஹிட் கொடுத்த இயக்குனர் நாதிர்ஷா, தனது அடுத்த படமாண 'கட்டப்பனையில் ரித்விக் ரோஷன்' படத்தில் ஹீரோவாக விஷ்ணு உன்னிகிருஷ்ணனை அறிவித்தபோதே பலரும் மேலே கூறியதுபோன்றே கேலி பண்ணினார்கள்..
இவர் டைரக்சனில் நடிக்க முன்னணி ஹீரோக்கள் பலர் தயாராக இருக்கும்போது, இவர் இப்படி பண்ணுகிறாரே என இயக்குனர் நாதிர்ஷாவின் காதுபடவே பேசினார்கள்.. ஆனால் இன்று என்ன ஆகியிருக்கு தெரியுமா..? பத்து நாட்களில் பத்து கோடி ரூபாய் வசூலித்து பிரபல நடிகர்களுக்கு இணையான சாதனையை செய்திருக்கிறது இந்தப்படம்.. இந்தப்படத்தில் ஹீரோவாக நடித்த படத்தின் கதாசிரியர் உன்னி கிருஷ்ணன், தனக்கேற்ற மாதிரி ஒரு கதையை எழுதியதும் அதை நாதிர்ஷா துணிந்து இயக்கியதும் இதற்கு முக்கிய காரணம்.. படத்தின் இயக்குனர் நாதிர்ஷாவை கேட்டால் கதைதான் என் படத்தின் கதாநாயகன் என்கிறார்.