கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! |
மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான பிரேமம் படம் தெலுங்கில் நாக சைதன்யா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகி வருகிறது. இதில் சாய் பல்லவி நடித்த மலர் கேரக்டரில் ஸ்ருதிஹாசன் நடித்திருப்பது பலரின் கிண்டலுக்கும் ஆளாகி இருக்கும் நிலையில் நாக சைதன்யாவும் எந்த அளவுக்கு நிவின்பாலி கேரக்டருக்கு மரியாதை செய்திருப்பார் என சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் இதற்கு தன்னிலை விளக்கம் அளிக்கும் விதமாக, நிவின்பாலி அளவுக்கு நடிக்காவிட்டாலும் தன்னால் இயன்ற அளவுக்கு நடித்துள்ளதாக கூறி ஜகா வாங்கியுள்ளார் நாக சைதன்யா.
மேலும் நிவின்பாலி பற்றி அவர் கூறுகையில், “நிவின்பாலியிடம் இருந்து கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது.. அவரது நடிக்கும் ஸ்டைல் என்பது ஒரு பாடப்புத்தகம் மாதிரி.. குறிப்பாக கல்லூரி மாணவனாக அவர் அந்த கதாபாத்திரத்தை பிரதிபலித்திருந்தது என்னை ரொம்பவே இம்ப்ரெஸ் செய்துவிட்டது.. முன்கோபி கேரக்டர்தான் என்றாலும் அதை இயல்பான நகைச்சுவை உணர்வால் அழகாக பேலன்ஸ் செய்திருந்தார். நான் என்னளவுக்கு என்னுடைய ஸ்டைலில் அந்த கேரக்டரை சரியாக செய்திருக்கிறேன் என நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார் நாக சைதன்யா.