உலகில் புடவையை விட சிறந்த ஆடையில்லை - ஆலியா பட் | கல்கி 2898 ஏ.டி படத்தில் மகேஷ் பாபு? | அமிதாப் பச்சனுக்கு அடுத்து எனக்கு தான் : கங்கனா பெருமிதம் | ‛டிராவல் ஏஜென்ட்' படத்தை துவக்கி வைத்து ஹீரோவை அறிமுகம் செய்த தர்மேந்திரா | எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபலம் | நடிகைகளின் பாராட்டு மழையில் மஞ்சும்மேல் பாய்ஸ் | குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சலசலப்பு : வெளியேறிய நாஞ்சில் விஜயன் | ஜப்பானுக்கு குடும்பத்துடன் டூர் சென்ற புகழ் | ‛தக் லைப்' : சிம்பு நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு | புஷ்பாவால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை : பஹத் பாசில் ஓபன் டாக் |
ஜீ தமிழில் அதிக எதிர்பார்ப்பில் ஒளிபரப்பான தொடர் சண்டக்கோழி. இதில், ராஜா ராணி 2 தொடரில் ஹீரோயினாக நடித்த ரியா விஸ்வநாத், புதுப்புது அர்த்தங்கள் தொடரில் ஹீரோவாக நடித்த நியாஸ் ஜோடி சேர்ந்தனர். மேலும் வீஜே கதிர், சுப்புலெட்சுமி ரங்கன், கிருபா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் என பெரிய பட்டாளமே இந்த தொடரில் நடித்து வந்தனர். ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக சென்ற இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏனோ போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. எனவே, டிஆர்பியிலும் தொடர்ந்து சொதப்பி வந்தது. இந்நிலையில் ஒருவருடம் கூட ஆகாத நிலையில் சண்டக்கோழி தொடர் முடிவுக்கு வரவுள்ளது. இதற்கு பதிலாக புதிய தொடருக்கான ஆரம்பகட்ட பணிகளும் தொடங்கி விட்டதாக சின்னத்திரை வட்டாரங்களிலிலிருந்து தகவல்கள் வெளியாகி வருகிறது.