‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
மலையாள நடிகர் பஹத் பாசில் மலையாள படங்களில் நடித்துவந்த போதே அவரது நடிப்பிற்காக மலையாளத்தை தாண்டிய ரசிகர்களாலும் பாராட்டப்பட்டவர். அந்த வரவேற்பின் காரணமாக தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்திலும், லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்திலும் நடித்து இன்னும் அதிக அளவில் ரசிகர்களை பெற்றார்.
மாமன்னன் படத்தில் வில்லத்தனம் காட்டி மிரட்டிய அவர், சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ஆவேசம் திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து மொழி தாண்டி ரசிகர்களிடம் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளார். அடுத்ததாக அவர் வில்லனாக நடித்துள்ள புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, “புஷ்பா திரைப்படத்தில் என்னுடைய நடிப்பு குறித்து பாராட்டிய பலர், புஷ்பா 2 படம் குறித்து அதிகம் எதிர்பார்ப்பதாக கூறி வருகின்றனர். மேலும் பான் இந்திய நடிகராக நான் மாறிவிட்டதாகவும் பலர் கூறுகின்றனர். பான் இந்திய நடிகராக மாறும் அளவிற்கு நான் என்ன செய்து விட்டேன் என தெரியவில்லை. புஷ்பா திரைப்படம் மூலம் என்னுடைய திரையுலக பயணத்தில் எந்த மாற்றமும் நிகழவில்லை. அது இயக்குனர் சுகுமாரின் தலைமையிலான கூட்டணி உழைப்புக்கு கிடைத்த வெற்றி. நான் எப்போதும் போல என்னால் என்ன சிறப்பாக கொடுக்க முடியுமோ அதை மட்டுமே செய்து வருகிறேன். அது மட்டுமல்ல.. என்னுடைய திரையுலக வாழ்க்கை என்பது மலையாள சினிமாவில் தான் இருக்கிறது. மலையாளத்தில் நான் செய்த கதாபாத்திரங்களை போல இதுவரை வேறு எந்த மொழியிலும் நான் செய்தது இல்லை” என்று கூறியுள்ளார்.