கலைஞராக இருப்பதே மகிழ்ச்சியை தருகிறது: ஸ்ருதிஹாசன் | இரு வாரங்களில் 'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு: கவுதம் மேனன் நம்பிக்கை | திருமணம் எப்போது? வெட்கப்பட்டு நழுவிய சாய் தன்ஷிகா | என் மகன் வேத் நடிக்க வருவான்: ரஜினி மகள் சவுந்தர்யா | ஆதரவற்றோர் இல்லத்திற்கு குடும்பத்துடன் சென்று உணவளித்து பாட்டு பாடி மகிழ்வித்த வினித் சீனிவாசன் | 'இருமுடி' படத்தில் ரவி தேஜாவின் ஐயப்ப பக்தர் கதாபாத்திரம் குறித்து இயக்குனர் புதிய தகவல் | விமான நிலையத்தில் போட்டோகிராபரை கட்டிப்பிடித்து பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ராஷ்மிகா மந்தனா | 'பூத் போலீஸ் 2' படத்தை இயக்கும் பிரியதர்ஷன் | சிரஞ்சீவி படத்தில் இணையும் அனுராக் காஷ்யப் | பிளாஷ்பேக்: இயக்குநர் ஏ ஜெகன்னாதனின் “படகோட்டி” பட அனுபவங்கள் |

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் 'அமரன்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜான் வாழ்க்கை வரலாற்று படமாக இப்படம் உருவாகி வருகிறது. இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ராஜ்கமல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில் இப்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கில் தொடங்கியுள்ளனர். இது பெரும்பாலும் கிளைமாக்ஸில் இடம் பெறும் ஆக்ஷன் காட்சிகள். இதனை ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்பறிவு உருவாக்கி வருகின்றனர் என கூறப்படுகிறது.