விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற, விக்ரம் அப்படியே மம்முட்டி வீட்டிற்கு சென்று மம்முட்டி, துல்கர் சல்மான் இருவரையும் சந்தித்துவிட்டு வந்துள்ளார். தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காதபோது, மலையாளத்தில் நடித்து வந்த விக்ரமுக்கு தனது பல படங்களில் வாய்ப்புகள் கொடுத்து ஆதரித்தவர் மம்முட்டி என்பதால் அவர் மீது விக்ரமிற்கு தனி மரியாதையும் அன்பு உண்டு.. அதேசமயம் விக்ரமிற்கு இன்னொரு நெருங்கிய சொந்தமும் கேரளாவில் இருக்கிறது.. அது வேறு யாருமில்லை.. நடிகை காவ்யா மாதவன் தான்.
பதினைந்து வருடங்களுக்கு முன் தமிழில் 'காசி' படத்தில் விக்ரமுக்கு தங்கையாக நடித்தபோது ஏற்பட்ட சகோதர பந்தம் இது. கேரளாவுக்கு போகும்போதெல்லாம் முடிந்தவரை ஒரு நடை காவ்யா மாதவனின் வீட்டுக்கும் விசிட் அடுத்து விடுவார் விக்ரம்.. அதேபோல விக்ரம் கேரளாவுக்கு வந்த தகவல் தெரிந்தால், “அண்ணா ப்ளீஸ்.. வீட்டுக்கு வந்துட்டு சாப்பிட்டுவிட்டு போங்கண்ணா” என உடனே போன் போட்டுவிடுவாராம் காவ்யா மாதவன். தன்னால் வரமுடியவில்லை என்றால், “ஸாரிம்மா.. இன்னைக்கு ஒருநாள் வேலையாத்தான் வந்திருக்கிறேன்.. இன்னொருநாள் வரேன்மா” என சொல்லிவிடுவாராம் விக்ரம்..