போதைப்பொருள் பயன்படுத்த மாட்டேன் ; அபிடவிட் கேட்கும் கேரள தயாரிப்பாளர் சங்கம் | டைட்டிலை மாற்றச் சொல்லி சென்சார் நிர்பந்தம் ; தள்ளிப்போன சுரேஷ் கோபி பட ரிலீஸ் | ஆமதாபாத் விமானத்தில் பயணிக்காத சினிமா இயக்குனரும் விபத்தில் மரணம் ; ஒரு வாரத்திற்கு பின் கண்டுபிடிப்பு | குபேரா படத்திற்காகவும் தேசிய விருது பெறுவாரா தனுஷ்? | விமல் நடிக்கும் 36வது படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கியது! | அடுத்த மாதத்தில் 'கருப்பு' படத்தின் மிகப்பெரிய விருந்து! ஆர். ஜே .பாலாஜி வெளியிட்ட தகவல் | ஒரே நாளில் முக்கிய சினிமா பிரபலங்களுக்குப் பிறந்தநாள் | நாகார்ஜுனாவுக்கு திருப்புமுனை தந்த 'குபேரா' | அரசியல் பேசப் போகிறதா 'ஜன நாயகன்'? | நன்றி மறந்த சகாக்களால் கேரளாவுக்கே சென்ற நடிகை |
மலையாளத்தில் பிரபல நடிகரும் தற்போதைய மத்திய இணை அமைச்சருமான சுரேஷ்கோபி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜேஎஸ்கே (ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா)'. முழுக்க முழுக்க நீதிமன்ற பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் பிரவீன் நாராயணன் இயக்கியுள்ளார். ஜூன் 27ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருப்பதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் சமீபத்தில் இந்த படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டு எந்தவித 'கட்'களும் இன்றி யு/ஏ 13+ சான்றிதழையும் பெற்றது. ஆனால் எதிர்பாராத விதமாக திடீரென சென்சார் குழுவினர் இந்த படத்தின் டைட்டிலில் சிறிய மாற்றம் செய்யும்படி படக்குழுவினருக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
குறிப்பாக டைட்டிலில் இடம் பெறும் ஜானகி என்கிற பெயரை மாற்றும்படி அவர்கள் நிர்பந்தித்து உள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள படத்தின் இயக்குனர் பிரவீன் நாராயணன், அதனால் வரும் ஜூன் 27ம் தேதி திட்டமிட்டபடி இந்த படம் ரிலீஸ் ஆகாது என்றும் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார். மீண்டும் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டு இதே டைட்டிலை தக்க வைப்பார்களா அல்லது டைட்டிலை மாற்றுவார்களா என்பது இனிமேல் தான் தெரிய வரும். ஒரு மத்திய இணை அமைச்சராக இருக்கக்கூடிய சுரேஷ்கோபி நடித்த படம் கூட சென்சாரில் சிக்கலை எதிர்கொள்கிறது என்பது ஆச்சரியமான ஒன்றுதான்.