ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் | அடுத்து கொரோனா வந்தால் சென்னை காலி ; பொள்ளாச்சியில் செட்டில் ஆக ஆசை: விஜய் ஆண்டனி | சாய் பல்லவிக்கு எழுதப்பட்ட கதையில் நடித்த சமந்தா | ஆர்யா 40 : படப்பிடிப்பு நிறைவு | ஜூன் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | எவ்வளவு காலம் முடியுமா அவ்வளவு காலம் கார் ரேஸ் : அஜித் பேட்டி | 'கருப்பு' - இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் | ரூ.230 கோடி வசூலைக் கடந்த 'பெத்தி' | அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் |

மலையாள திரையுலகில் கடந்த வருடம் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதை தொடர்ந்து பல நடிகைகள் தாங்கள் பாலியல் ரீதியாக பிரச்னைகளை சந்தித்ததாக நடிகர்கள், இயக்குனர்கள் மீது புகார்களையும் குற்றச்சாட்டுகளையும் வைத்தனர். ஆனால் பின்னர் இது குறித்த விசாரணையில் இவை அனைத்தும் கிட்டத்தட்ட போலியான குற்றச்சாட்டுகள் என்றும் ஆதாரமற்றவை என்றும் பல வழக்குகளில் நிரூபணம் ஆகின. அப்படித்தான் நடிகை மினு முனீர் என்பவர் பிரபல மலையாள இயக்குனரும் நடிகருமான பாலச்சந்திரன் மேனன் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். காவல்துறையில் இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் பாலச்சந்திர மேனன் மீது வழக்கு பதியப்பட்டது.
அதேசமயம் நடிகை மினு முனீரும் அவரது வக்கீலும் சேர்ந்து தன்னை மிரட்டி பணம் பறிக்க முயற்சிப்பதாக கூறி பாலச்சந்திரன் மேனனும் போலீசில் புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து நடிகை மினு முனீர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது அவரது வக்கீலான சங்கீத் லூயிஸ் என்பவரும் திருச்சூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவர் இரண்டாவது குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.