ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
பிருவித்ராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள 'எல் 2 எம்புரான்' மலையாளப் படம் இந்த வாரம் மார்ச் 27ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகிறது. இந்தப் படத்திற்கு தமிழகத்தில் தியேட்டர்களை ஒப்பந்தம் செய்து தரும் பணிகளை ரெட் ஜெயண்ட் நிறுவனம் செய்து வருகிறதாம்.
அதன் காரணமாக அதேநாளில் விக்ரம் நடித்துள்ள தமிழ்ப் படமான 'வீர தீர சூரன் 2' படத்திற்குக் கிடைக்கும் தியேட்டர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாம். இத்தனைக்கும் தமிழகத்தில் 'எல் 2 எம்புரான்' படத்திற்கு எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லை.
கேரளாவில் 'எல் 2 எம்புரான்' படத்திற்குத்தான் முன்னுரிமை, அது எங்கள் மலையாளப் படம் என அங்குள்ள தியேட்டர்காரர்கள் சொல்கிறார்களாம். அதனால், அங்கு 'வீர தீர சூரன் 2' குறைவான தியேட்டர்களிலேயே வெளியாகிறது. ஆனால், அது போல ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழ்ப் படத்திற்குத்தான் முன்னுரிமை என சொல்லவில்லை.
மும்மொழிக் கொள்கையை எதிர்த்து, தமிழ், தமிழ், என பேசிக் கொண்டிருக்கும் ஆளும் கட்சியின் நிறுவனமான ரெட் ஜெயண்ட் நிறுவனம் மலையாளப் படத்திற்கு இப்படி முன்னுரிமை தருவது சரியா என தமிழ்த் திரையுலகத்தில் உள்ள பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். இத்தனைக்கும் முதல்வர் குடும்பத்திற்கு விக்ரமும் ஒரு விதத்தில் உறவினர் தான்.
இதனால், 'வீர தீர சூரன்' குழுவினர் அமைச்சர் உதயநிதியிடம் இது குறித்த முறையிட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.