கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

மலையாள திரையுலகில் கடந்த வருடம் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதை தொடர்ந்து பல நடிகைகள் தாங்கள் பாலியல் ரீதியாக பிரச்னைகளை சந்தித்ததாக நடிகர்கள், இயக்குனர்கள் மீது புகார்களையும் குற்றச்சாட்டுகளையும் வைத்தனர். ஆனால் பின்னர் இது குறித்த விசாரணையில் இவை அனைத்தும் கிட்டத்தட்ட போலியான குற்றச்சாட்டுகள் என்றும் ஆதாரமற்றவை என்றும் பல வழக்குகளில் நிரூபணம் ஆகின. அப்படித்தான் நடிகை மினு முனீர் என்பவர் பிரபல மலையாள இயக்குனரும் நடிகருமான பாலச்சந்திரன் மேனன் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். காவல்துறையில் இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் பாலச்சந்திர மேனன் மீது வழக்கு பதியப்பட்டது.
அதேசமயம் நடிகை மினு முனீரும் அவரது வக்கீலும் சேர்ந்து தன்னை மிரட்டி பணம் பறிக்க முயற்சிப்பதாக கூறி பாலச்சந்திரன் மேனனும் போலீசில் புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து நடிகை மினு முனீர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது அவரது வக்கீலான சங்கீத் லூயிஸ் என்பவரும் திருச்சூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவர் இரண்டாவது குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.