கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

மலையாள நடிகர் சங்கத்திற்கு வரும் ஆகஸ்ட் 15ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 30 வருட காலகட்டத்தில் இப்போதுதான் முறையாக தலைவர் பதவிக்கு ஒரு பெண் அதாவது நடிகை ஸ்வேதா மேனன் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் ஆணாதிக்கம் கொண்ட பலர் அவர் போட்டியிடுவதை தடுக்க முயற்சித்தனர். அது முடியவில்லை. ஆனால் தேர்தலுக்கு முன்பாக அவரது பெயரையும் புகழையும் குலைக்கும் விதமாக எப்போதோ சில மாதங்களுக்கு முன் ச்வ்வ்தா மேனன் அளித்த ஒரு பேட்டி தொடர்பாக இப்போது அவருக்கு எதிராக காவல் நிலையத்தில் ஒரு நபர் மூலமாக புகார் அளித்ததாகவும் அதன் காரணமாக ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது என்றும் சமீபத்தில் செய்தி வெளியானது.
இந்த நிலையில் இதே கருத்தை முன்வைத்து, விரைவில் நடிகர் சங்க தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக இப்படி ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் இதனை நிறுத்தி வைத்து உத்தரவிட வேண்டும் என்றும் ஸ்வேதா மேனன் கேரளா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.ஜி அருண் இந்த வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
“இந்த புகாரானது மிகவும் குறுகிய காலத்தில் பதியப்பட்டு விரைவாக எப்ஐஆர் போடப்பட்டுள்ளது. முறைப்படியான போலீஸ் விசாரணை எதுவும் இன்றி அவசர கதியில் இந்த எப் ஐ ஆர் போடப்பட்டுள்ளதாகவே தெரிகிறது அதனால் ஸ்வேதா மேனன் மீதான விசாரணையை தற்சமயம் நிறுத்தி வைக்கும்படியும் உத்தரவிடுவதாக நீதிபதி கூறியுள்ளார் அந்த வகையில் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் ஸ்வேதா மேனனுக்கு வெற்றிக்கு குறுக்கே விழுந்த மிகப்பெரிய தடையும் நீங்கி விட்டது.. கிட்டத்தட்ட அவரது வெற்றி உறுதியாகிவிட்டது என்றே சொல்கிறார்கள்.