'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் |

ரஜினி நடிப்பில் தான் இயக்கி உள்ள கூலி படம் வருகிற 14ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் லோகேஷ் கனகராஜ். மேலும், கூலி படத்தில் மூன்று நிமிடம் ரஜினிகாந்த் இடைவிடாமல் ஆவேசமாக வசனம் பேசும் ஒரு காட்சி இடம் பெற்றிருப்பதாக ஏற்கனவே அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் படத்தின் இடைவேளை திருப்புமுனையாக, அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கக் கூடியதாகவும் இருக்கும். இதுவரை யாரும் இப்படி ஒரு இடைவேளை காட்சியை வைக்க முயற்சி செய்யவில்லை. அதை நான் செய்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இது படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
கேரளாவில் முன்பதிவு அமோகம்
இதனிடையே கேரளாவில் இன்று காலை 11 மணிக்கு கூலி படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி ஒரு மணி நேரத்தில் ஒரு கோடி ரூபாய்க்கான டிக்கெட்டுகள் விற்று தீர்த்துள்ளன. தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் ரஜினியின் கூலி படத்துக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. ரஜினி நடித்த ஜெயிலர் படம் கேரளாவில் 50 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.