தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
ரஜினி நடிப்பில் தான் இயக்கி உள்ள கூலி படம் வருகிற 14ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் லோகேஷ் கனகராஜ். மேலும், கூலி படத்தில் மூன்று நிமிடம் ரஜினிகாந்த் இடைவிடாமல் ஆவேசமாக வசனம் பேசும் ஒரு காட்சி இடம் பெற்றிருப்பதாக ஏற்கனவே அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் படத்தின் இடைவேளை திருப்புமுனையாக, அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கக் கூடியதாகவும் இருக்கும். இதுவரை யாரும் இப்படி ஒரு இடைவேளை காட்சியை வைக்க முயற்சி செய்யவில்லை. அதை நான் செய்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இது படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
கேரளாவில் முன்பதிவு அமோகம்
இதனிடையே கேரளாவில் இன்று காலை 11 மணிக்கு கூலி படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி ஒரு மணி நேரத்தில் ஒரு கோடி ரூபாய்க்கான டிக்கெட்டுகள் விற்று தீர்த்துள்ளன. தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் ரஜினியின் கூலி படத்துக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. ரஜினி நடித்த ஜெயிலர் படம் கேரளாவில் 50 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.