எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி | விவாகரத்து செய்திகளுக்கு மவுனி ராய் கொடுத்த விளக்கம் | ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்' | மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ் | கேமராவுக்கு பின்னால் எனக்கு நடிக்க தெரியவில்லை : மீனாட்சி சவுத்ரி | 'ஜனநாயகன்' போல் பைரசியில் 'கருப்பு'?: அச்சத்தில் தயாரிப்பாளர்கள் | பரிதாபம் : ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஒருவர் பலி | இளையராஜா குடும்பத்துடன் 50 ஆண்டுகளாக நட்பு தொடர்கிறது: மறைந்த பஞ்சு அருணாசலம் மகன் சுப்பு பஞ்சு பேட்டி | கருப்பு : அனைத்து பகல் காட்சிகளும் ரத்து | திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த நடிகை அஞ்சலி |

ரஜினி நடிப்பில் தான் இயக்கி உள்ள கூலி படம் வருகிற 14ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் லோகேஷ் கனகராஜ். மேலும், கூலி படத்தில் மூன்று நிமிடம் ரஜினிகாந்த் இடைவிடாமல் ஆவேசமாக வசனம் பேசும் ஒரு காட்சி இடம் பெற்றிருப்பதாக ஏற்கனவே அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் படத்தின் இடைவேளை திருப்புமுனையாக, அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கக் கூடியதாகவும் இருக்கும். இதுவரை யாரும் இப்படி ஒரு இடைவேளை காட்சியை வைக்க முயற்சி செய்யவில்லை. அதை நான் செய்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இது படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
கேரளாவில் முன்பதிவு அமோகம்
இதனிடையே கேரளாவில் இன்று காலை 11 மணிக்கு கூலி படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி ஒரு மணி நேரத்தில் ஒரு கோடி ரூபாய்க்கான டிக்கெட்டுகள் விற்று தீர்த்துள்ளன. தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் ரஜினியின் கூலி படத்துக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. ரஜினி நடித்த ஜெயிலர் படம் கேரளாவில் 50 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.